ஒரு இலட்சம் மெட்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அமைச்சர் றிஷாட் அறிவிப்பு
-அமைச்சரின் ஊடகப்பிரிவு அரிசித்தட்டுப்பாடு எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் ஒரு இலட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை வழங்குயுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் அரிசியானது களஞ்சியப்படுத்தப்பட்டு தேவையேற்படும்பட்சத்திலே சந்தைக்கு விடப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் புத்தாண்டில் எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவி;த்த அமைச்சர், பாவனையாளர்களின் நலன்களை பாதிக்கும் வகையில் பொருட்களின் விலைகளை எழுந்தமானமாக கூட்டி விற்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்….
