Headlines

“சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெற்று இறக்குமதியை குறைப்போம்” பெல்வத்த கரும்பு அறுவடை விழாவில் அமைச்சர் றிஷாத்

-சுஐப் காசிம்- நாட்டின் கரும்புச்செய்கையில் தன்னிறைவுபெற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனியின் கொள்ளளவினை வெகுவாக குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று கைத்தொழில் மற்றும் வர்த தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பெல்வத்த சீனி தொழிற்சாலை அடங்கியுள்ள பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள கரும்பினை அறுவடை செய்யும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (2) காலை 7 மணியளவில்இடம்பெற்றது. அமைச்சர் றிஷாத் கரும்பு அறுவடையினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார். லங்கா சீனிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நவீன் அதிகார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி, ஊவா மாகாண சபை உறுப்பினர் தர்மசேன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பௌசர் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, சீனி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதே எமது…

Read More

வாழைச்சேனை  206 பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா 

நேற்று 01.03.2017 ஆம் திகதி நியுஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஜெளபர்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது. தையல் பயிற்சி முடிவில் தையல்  இயந்திரம் தங்களுக்கு வழங்கப்படும்  அதனை பயன்படுத்தி தங்களின் குடும்ப வருமானத்தை  உயர்த்தி கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதி…

Read More

வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் குறித்து பிரதியமைச்சர் அமீர் அலி

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளுக்கான அரச நியமனம் வழங்குவது குறித்து அரசாங்கம் சாதகமான முடிவினை இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அறிவிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேலையில்லா பட்டதாரிகளை இன்று(1.3.2017) புதன்கிழமை பிற்பகள் சந்தித்த போது அவர்களிடம் மேற்கண்டவாறு பிரதியமைச்சர் அமீர் அலி கூறினார். வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிய கோரிக்கை கடிதத்தினையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லா பட்டதாரிகளிடம்…

Read More

பிறைந்துறைச்சேனை தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை 206A பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 01.03.2017 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நளீம்   தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய…

Read More