Headlines

சேவை செய்யும் அரசியல்வாதிகளை மக்களே இனங்கண்டு கொள்வர் மன்னார் காக்கையன் குளத்தில் அமைச்சர் ரிஷாட்!!!

சுஐப் எம் காசிம் யுத்த காலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மக்களுடன் இணைந்து பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த அரசியல்வாதிகள் முன்னின்று பணியாற்றினார்கள் என்று அந்த மக்களுக்கு நன்கு தெரியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் காக்கையன் குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர்…

Read More

கோப்பாபிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் போராட்டம்

-என்.எம். அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே! யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் உணர்வுபூர்வமான போராட்டம் ஒன்று (2017.02.20) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்டெடுக்கும் நோக்கில் 20 நாட்களுக்கும் மேலாக நடாத்திவரும் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு வடமாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய ஆதரவு தெரிவித்து வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் பல இடங்களில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள 50…

Read More

தம்புள்ளை பள்ளிவாசல் சட்டரீதியானது – வக்பு சபை தலைவர்

-நன்றி விடிவெள்ளி  தம்­புள்ளை பள்­ளி­வாசல் சட்­ட­ரீ­தி­யா­ன­தாகும். பள்­ளி­வா­சலை வேறோர் இடத்தில் இட­மாற்றிக் கொள்ளத் தேவை­யான காணியைப் பெற்றுக்   கொள்­வது எமது உரி­மை­யாகும். வக்பு சொத்­து­களைப் பரி­பா­லிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்கும் பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மௌனம் காக்­காது சட்­ட­ரீ­தி­யாக போராட வேண்டும். இது விட­யத்தில் வக்பு சபை தேவை­யான அனைத்து ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரி­வித்தார். தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் வின­விய போதே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்து அவர்…

Read More

கடல்சார் மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை – பிரதமருக்குக் நவவி MP கடிதம்

புத்தளம் மாவட்டத்திற்கான கடல் சார் பல்கலைகழகம் (Ocean University) மற்றும் விருந்தோம்பல் கற்கைகள் பாடசாலை (Hotel School) ஆகிய கற்கை நிலையங்களுக்கான நிர்மாண வேலைகளை துரிதமாக மேற்கொள்ள கூறி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி…

Read More

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றி வளைப்பில் மேலும் 135 வர்த்தகர்கள் அகப்பட்டனர்!!!

அமைச்சின் ஊடகப் பிரிவு வியாபாரச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் அரிசிப்புரளிக்கு முடிவு கட்டும் வகையில் அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரைக்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கையில் மேலும் பல வர்த்தகர்கள் அகப்பட்டுள்ளனர் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி 52 பேர் அரிசியை விலை கூட்டி விற்று அகப்பட்டிருந்தனர். நேற்று (21) ஆம் திகதி நுகர்வோர் பாதுகாப்பு சபை விசாரணை அதிகாரிகள் வர்த்தக…

Read More

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களின் மண் மீட்புப் போராட்டத்தை அ.இ.ம.கா. ஆதரிக்கிறது

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்களின் வாழ்வு நிலங்களை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் மண் மீட்புப் போராட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரித்து நிற்கிறது. எஸ். சுபைர்தீன் செயலாளர் நாயகம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 

Read More

வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேறவில்லை: வடமாகாணசபையில் பிரேரணை

-பாறுக் ஷிஹான் வில்பத்து காட்டில் காடழிப்பு செய்து முஸ்லீம் மக்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றார்கள் எனும் குற்ற சாட்டில் உண்மை இல்லை என வடமாகாண எதிர்கட்சி உறுப்பினர் அ.ஜெயதிலக சபையில் பிரேரணை ஒன்றினை முன் மொழிந்தார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். மன்னார் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வசித்த முஸ்லீம் மக்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட்டு…

Read More