Headlines

ஒரே வகையான அரிசிக்கு இரண்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டது ஏன்? தகவல் திணைக்கள ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்!!!

சுஐப் எம் காசிம் அரிசிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை இக்கட்டான நிலையில் ஆக்குவதற்கு மேற்கொண்ட சதியை முறியடிக்கும் வகையிலேயே அரிசிக்கான நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று 20 மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட வரட்சியை காரணம் காட்டி அரிசிக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதனால் தான் வெளிநாடுகளில் இருந்து அவசரமாக அரிசியை…

Read More

தாஜ் சமுத்திராவில் வேலைப்பட்டறை அங்குரார்ப்பண நிகழ்வை அமைச்சர் றிஷாட் தொடக்கிவைப்பு!!!

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் கீழான கழிவற்றல், தாவரக்கழிவகற்றல் அளவீடுகள் மற்றும் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் தொடர்பிலான வேலைப்பட்டறையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உலக வர்த்தக மையத்தின் பிரதிநிதி எரிக் விஜ் ஸ்டோர்ம், வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொனாலி விஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More

கல்பிட்டி கல்வி வளர்ச்சி சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடல்

கல்பிட்டி மக்களின் கல்வியில் அக்கறை கொண்ட “கல்பிட்டி கல்வி வட்டம்” என்ற அமைப்பினர் நேற்று 2017.02.19 கல்பிட்டியில் வைத்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பில், கல்பிட்டி மக்களின் கல்வி மட்டம், கல்பிட்டி பாடசாலைகள் மற்றும் மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் சில கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

Read More

கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி பாடசாலையில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டி

கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி பாடசாலையில் அண்மையில் (2017.02.17) நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டார்.

Read More

தாராபுரம் அல்-மினா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி

மன்னார் தாராபுரம் அல் – மினா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர், திறனாய்வு விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று முன்தினம் (18) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

ஊத்துச்சேனை பிரதேசத்தில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

நேற்று 19.02.2017 ஆம் திகதி ஊத்துச்சேனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மோகன்  தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் , மீனவர்களுக்கான மீன் பிடி வலை, மண்வெட்டி, மற்றும்  சோளன் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது. யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக…

Read More

புத்தளம் ஆலங்குடாவிற்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் விஜயம்

-A.R.A.RAHEEM நேற்று முன்தினம் (18) புத்தளம் ஆலங்குடா பகுதிக்கான திடீர் விஜயமொன்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் மேற்கொண்டார் வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேறிய மக்கள் வாழும் கிராமமான ஆலங்குட மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாழும் மக்களை சந்திப்பதற்காக இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள்…

Read More