Headlines

பம்பைமடு பிரதேச குப்பை பிரச்சினை; அமைச்சர் றிஷாத் நேரில் ஆராய்வு

-சுஐப் எம் காசிம் வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் தொடர்ச்சியாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களின் பாதிப்பைக் கருத்திற்கொண்டு குப்பைகளை மீள் சுழற்சி செய்து உரமாக்கும் திட்டத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால் ரூபா 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கமலேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா…

Read More

இனவாத செயற்பாடுகளை முறியடிக்க அனைவரும் அணிதிரள வேண்டும் – ARM.ஜிப்ரி

-எம்.எஸ்.எம்.ஸாகிர் அம்பாறை மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக இன நல்லுறவுடன் ஒற்றுமையாக வாழ்ந்துவந்த தமிழ் – முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு அற்ற நிலையும் இனவிரிசலும் ஏற்படுவதற்கு கடந்த கால போர்ச்சூழல், இயக்கங்கள், குறுகிய சிந்தனையுடைய அரசியல் போக்குகள் என்பன காரணங்களாக அமைந்தன. தற்போது இந்த நிலை படிப்படியாக மாற்றமடைந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற விவகார செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கல்முனை…

Read More

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத் தலைவர் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் இன்று (17) இடம்பெற்றது. இக் ஒருங்கிணைப்பு குழு பிரதேச செயலக செயலாளர் நெளபல் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் நெளபல், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Read More

வில்பத்துவை முஸ்லிம்கள் அழிக்கவில்லை- ஹிரு TV யில்  திலக் காரி­ய­வசம் (வீடியோ)

வில்பத்துவை முஸ்லிம்கள் அழிக்கவில்லை என நேற்று (16) ஹிரு TV யில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் தேசிய சூழ­லி­ய­லாளர் அமைப்பைச் சேர்ந்த சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் ஆதாரங்களுடன் விபரிக்கும் வீடியோ காட்சி.

Read More

முஸ்லிம் எம்.பி.க்களின் ஆலோசனைகளை பெற்ற பின்பே பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் அமைச்சர் ஹலீம் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் சிபார்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு தனது அறிக்­கையை நீதி­ய­மைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷவிடம் சமர்ப்­பித்­ததும் அதன் பிர­திகள் அனைத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் வழங்­கப்­பட்டு அவர்­க­ளது கருத்­து­களும் ஆலோ­ச­னை­களும் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட பின்பே பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­படும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச்…

Read More

அஷ்ரப் பெற்றுக்கொடுத்த காணிக்கு உறுதிப்பத்திரம் வழங்க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

–ஏ.எச்.சித்தீக் காரியப்பர் திருகோணமலை மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அப்போது அங்கு சுமார் 17 வருடங்களாக அமர்த்தி வாசிக்கப்பட்ட அல்லது முற்றாக மறைக்கப்பட்ட ஒரு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருமலை குச்சவெளி பிரதேசத்திலுள்ள புடவைக்கட்டு என்ற கிராமத்தில் வாழும் மக்கள் அமைச்சர் றிஷாத்தை சந்தித்து, மர்ஹும் அஷ்ரபினால் கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான உறுதிகளோ வேறு ஆவணங்களோ இதுவரை கிடைக்கவில்லை…

Read More

முதலைப்பள்ளி மற்றும் தொண்ணூறு ஏக்கர் பகுதிகளுக்கு விஜயம் செய்த நவவி MP

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் நேற்று முன்தினம் (15)  கல்பிட்டி வீதி, முதலைப்பள்ளி மற்றும் தொண்ணூறு ஏக்கர் பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்பினை மேற்கொண்டார். இதன்போது முதலைப்பள்ளி “தாருல் உலூம் கஸீஸுல் ஹுதா” மத்ராஸா மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விற்கான வசதிகளை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நடவடிக்கை எடுத்தார். அத்தோடு தொண்ணூறு ஏக்கர் பெரிய பள்ளிவாயல் மத்ரஸா பிரச்சினைகளையும்…

Read More

புறக்கோட்டை அரிசிச் சந்தைக்கு அமைச்சர் றிஷாட் திடீர்ப் பாய்ச்சல்

-அமைச்சின் ஊடகப் பிரிவு மொத்தத வியாபாரச் சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பில் இருந்த போதும் தட்டுப்பாடு என்று கூறி அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் எச்சரித்தார். புறக்கோட்டை 5ம் குருக்குத்தெருவில் உள்ள மொத்த வியாபார அரிசிக் கடைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து திடீரென விஜயம் செய்த அமைச்சர் அரிசி நிலவரங்கள் மற்றும் விலைகள் தொடர்பில் கேட்டறிந்தார். புறக்கோட்டை மொத்த…

Read More