கேப்பாபிலவு மக்களின் பிரச்சினையை அமைச்சர் றிஷாத் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு
எழுத்து மூலம் சமர்ப்பிப்பதெனவும் முடிவு -சுஐப் எம் காசிம் – முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் காணிப்பிரச்சினையையும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினையும் அவசரமாக தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதியிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். நேற்று முன்தினம் (06.02.2016) மாலை ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்ற அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இந்த வேண்டுகோளை விடுத்தார். சுதந்திர தினத்தன்று அந்தப் பிரதேசத்துக்கு தான் சென்றபோது கேப்பாபிலவு மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…
