Headlines

முஸ்லிம் சமூகத்தை உசுப்பி தமது நோக்கத்தை நிறைவேற்ற நாசகாரிகள் துடிக்கின்றனர். – குருநாகலையில் அமைச்சர் றிஷாட்.

(அமைச்சின் ஊடகப்பிரிவு) அமைதியாக வாழுகின்ற – அவ்வாறே தொடர்ந்தும் வாழவிரும்புகின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்தி எம்மை சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் எமது சமூகத்தை உசுப்பிவிடுதன் மூலம் தங்கள் இலக்கினை அடைவதற்கு முயற்சிப்பதாகவும்; அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.. குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்கடர் ஷாபி தலைமையில் இடம்பெற்ற இந்தக்…

Read More

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 31.01.2017 ஆம் திகதி மட்டக்களப்பு மன்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின்…

Read More

செம்மண்னோடையில் இடம்பெற்ற பயிற்சி நிலைய திறப்பு விழா

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 30.01.2017 செம்மண்னோடையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் சுபைதீன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜனாப் தெளபீக், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா, பிறைந்துரைச்சேனை அபிவிருத்தி குழு தலைவர் மன்சூர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்துக்கு உலமா கட்சித்தலைவர் தனது கட்சி சார்பாகவே சென்றாரே தவிர இதற்கும் அமைச்சர் ரிசாதுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என உலமா கட்சித்லைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் கூறியதாவது, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் சொல்லியனுப்பியதாக சிலர் குறிப்பிட்டுள்ளமை மிகப்பெரிய அபாண்டமாகும். இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன். உண்மையில்; அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத்தெளிவுள்ள அரசியல்வாதியாகும். உலமா கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு கட்சியாக இணைந்து…

Read More

நல்லாட்சி அரசு பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் – அமீர் அலி

சிறுபான்மையினரைப் பாதிக்கின்ற எந்த விடயத்திற்கும் நல்லாட்சி அரசு பாரிய விலை கொடுக்க வேண்டி வரும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி அல் இக்பால் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் நூலகக் கட்டடத் திறப்பு விழா நேற்று (30) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வித்தியாலய அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய பிரதிக் கல்விப்…

Read More

நள்ளிரவையும் தாண்டி கெகுனுகொல்ல மக்கள் அமைச்சர் றிஷாத்திற்கு  அமோக வரவேற்பு

நள்ளிரவையும் தாண்டி கெகுனுகொல்ல மக்களின் அமோக வரவேற்புக்கு மத்தியில் அமைச்சரை அழைத்துசெல்வதையும் அமைச்சரின் உரைக்காக காத்திருப்பதையும் படத்தில் காணலாம்.  

Read More

குளியாபிட்டி, வீரகமவுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலைய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜயத்தினை  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கொண்டார். பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், பால் உற்பத்திப்பொருற்களுக்கான விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தெரிவுசெய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கான குளிர்சாதனப்பெட்டியும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை கூற்றுறவு, போக்குவரத்து அமைச்சர் குனதாஷ தெஹிகம,  முன்னால் மாகாண சபை உறுப்பினர் நஸீர், Dr.சாபி, அஷார்தீன், அன்பாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Read More

“வில்பத்துக்கு, முஸ்லிம்களால் எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை” – இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர்

வில்பத்துவ தேசிய வனப்பகுதிக்கு, எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை என்று, இலங்கை இயற்கைக் கூட்டமைப்பின் தலைவர் திலக் காரியவசம் தெரிவித்தார். மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான வெறுப்பின் காரணமாக, வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில், வில்பத்து வனப்பகுதி அழிக்கப்படுவதாக பல முறைபாடுகள் பதிவாகியிருந்தன. இதனை ஆராயும் முகமாக, சனிக்கிழமையன்று (28) வில்பத்து வனப்பகுதிக்கு சென்ற மேற்படி கூட்டமைப்பினர், அங்கு நிலைமையைப் பார்வையிட்டனர். இதனையடுத்து அதன் தலைவர் தொடர்ந்து கூறியதாவது, “வில்பத்து…

Read More

மறிச்சுக்கட்டி, இலவங்குளப்பாதை வழக்கு;  (வீடியோ இணைப்பு)

மறிச்சுக்கட்டி இலவங்குளப்பாதை வழக்கில் அமைச்சர் ரிஷாட்டின் சார்பில் முதன்முறையாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உச்ச நீதிமன்றில் ஆஜர். வழக்கு விசாரணை ஜூன் 19 இற்கு ஒத்தி வைப்பு. மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்திற்குச் செல்லும்  மறிச்சுக்கட்டி – இலவங்குளப்பாதையை மூடவேண்டுமென்று ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்று 30 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில் முதன்…

Read More