Headlines

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு அமைச்சர் றிஷாத்  விஜயம்

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துவருவதால் பாடசாலைக்கு மேலதிக கட்டிட வசதியொன்றை அமைத்துத் தருமாறு ஊரின் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர். விரைவில் அதற்கான முன்னெடுப்பை மேற் கொள்வதாக உறுதியளித்தார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று…

Read More

“விளையாட்டு மைதானத்தை மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கே வழங்கவும்” வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

தம்பதெனிய மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை மாணவர்களுக்கு பயன்படுத்த குளியாப்பிடிய வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கி மைதானத்தை பாடசாலைக்கு கையளித்துள்ளார். மும்மன்ன பாடசாலை மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று ஆர்.ஆர்.ரி அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக குளியாபிடிய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

Read More

முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கான புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி திறந்து வைப்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள், முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கான புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் திறந்துவைக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

மீராவோடை அபிவிருத்தி குழு பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

மீராவோடை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு மீராவோடை முபாரக் மெளலவி அவர்களின் இல்லத்தில் நேற்று 17.01.2017 இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் இராப்போசனமும் இடம்பெற்றது.

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியினால் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக மண்டபத்தில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம் தலைமையில் 17.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. பட்டிருப்பு தொகுதிக்குட்பட்ட வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி , பட்டிபளை ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 194 விவசாயிகளுக்கு உபகரணங்கள்…

Read More

“யுத்தத்தால் பாதிப்புற்ற பிரதேசத்தை இன, மத பேதமின்றி கட்டியெழுப்ப முன் வாருங்கள்” – அமைச்சர் றிஷாத்

யுத்தத்தால் மோசமாகப் பாதிப்புற்ற வட மாகாணத்தைக் கட்டியெழுப்ப அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இன, மத பேதமின்றி கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வவுனியாவில் நேற்றுக் காலை (16) இடம்பெற்ற நவீன பேரூந்து நிலைய அங்குரார்ப்பண விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் அங்கு உரையாற்றினார். அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதம அதிதியாக பங்கேற்ற இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அமைச்சர் ரிஷாட்டுடன் பிரதிப்போக்குவரத்து அமைச்சர்…

Read More