Headlines

றிஷாத்துடன் இறுதிவரை இருப்பேன் – அமீன்

முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நாட்டு முஸ்லிம்களின் அவசியமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களும் அவருடனே உள்ளனர் என  அமீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் விலகவுள்ளதாக வெளியான தகவல் தவறானது. அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் நான் இறுதிவரை இருப்பேன். முஸ்லிம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பாரிய பங்காற்றிவரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது நமது கடமையாகும். யாழ்பாண மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை…

Read More

சிங்கள இனவாதிகளை திருப்திபடுத்த, மைத்திரி துடிக்கிறார் – சிராஸ் நூர்தீன்

பௌத்த வாக்குகளை பெற்று ஆட்சியை கைப்பற்ற சுதந்திரக் கட்சி திட்டமிடுவதாக கூறிய பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு விரோதமாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். இதுபற்றி பேசிய சிராஸ் மேலும் கூறியதாவது, மஹிந்தவின் வழியில் மைத்திரி செல்கிறார். முன்னர் பண்டாhநாயக்காவும் இப்படிதான் செய்தார். அவர்கள் சகலரும் இறுதியில் மண் கவ்வினர். சிங்கள வாக்குகளை இலக்குவைப்பதற்காக இவர்கள் கைக்கொள்ளும் இந்த உபாயம் முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமையும். சுதந்திரக் கட்சியை மீண்டும் பதவிக்கு கொண்டுவர மறைமுக காரியங்கள்…

Read More

வில்பத்து விகாரம் – மீண்டும் ஒன்றிணயும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள வில்பத்து விவகாரத்தால் ஏற்படவுள்ள பின்விளைவுகளை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய 21 முஸ்லிம் உறுப்பினர்களும் இணைத்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடையம் தொடர்பாக எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றத்தில் கூடவுள்ளதாகவும், பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும் நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தலையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது . இந்த நிகழ்வில் அமைச்சர்களான,பெளசி , ஹிஸ்புல்லாஹ், ஹலீம், றிசாத் உட்பட பிரதியமைச்சர் அமீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

வில்பத்து வன எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் : ஜனாதிபதியின் முடிவு தவறானது

வில்­பத்து வனத்தை விரி­வு­ப­டுத்­து­மாறும், அதனை வன­ஜீ­விகள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறும் ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்­ளமை மறிச்­சுக்­கட்­டியில் வாழும் முஸ்­லிம்­களின் பூர்­வீக காணி­களை அர­சாங்கம் அப­க­ரிப்­ப­தற்­கா­க­வாகும். இது ஜனா­தி­ப­தியின் தவ­றான முடி­வாகும். ஞான­சார தேரர், ஆனந்த சாகர தேரர் என்னும் இன­வா­தி­க­ளுடன் இணைந்து ஜனா­தி­பதி மேற்­கொள்ளும் இச்­செயல் திட்­ட­மிட்ட சதி­யாகும். ஜனா­தி­பதி தனது பிழை­யான முடி­வினை மாற்­றிக்­கொள்­ளா­விட்டால் முஸ்­லிம்கள் சார்பில் ஐக்­கிய நாடுகள் சபை வரை சென்று நீதி கேட்­ப­தற்கு தயா­ராக இருக்­கிறேன் என கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­சரும், அகில…

Read More

21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு

ஓட்டமாவடி ஸலாகியா பாலர் பாடசாலையின் 21ஆவது வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வு கடந்த 27.12.2016 ஆம் திகதி நாகூர் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிக்கா மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர் , மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஹான் , பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களும்…

Read More