ஜனாதிபதி தனது பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டும் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வேண்டுகோள்
வில்பத்து சரணாலயத்துக்கு சொந்தமான பகுதியை விரிவுபடுத்தி அதனை வனஜீவராசிகள் வலயமாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஜனாதிபதி விடுத்திருக்கும் அறிவிப்பானது 26 வருடங்களுக்குப் பின்னர் மீளக்குடியேறியுள்ள முசலிப் பிரதேச முஸ்லிம் அகதிகளை மீண்டுமொரு முறை அகதியாக்கும் முயற்சியெனவும் ஜனாதிபதி தனது அறிவிப்பை ரத்துச்செய்ய வேண்டுமெனவும் வட மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முசலிப் பிரதேச முஸ்லிம்களை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றுவதற்காக இனவாதிகள்; தொடர்ந்து மேற்கொண்டு வரும் சதி முயற்சிகளின் இன்னுமொரு அங்கமாகவே, அவர்கள் அந்தப் பிரதேசத்தின்…
