Headlines

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிர்ப்பு

-பாறுக் ஷிஹான்- யாழ் பரச்சேரி முஸ்லீம் கிராமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான்  பதியுதீன் விஐயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு திடீர்   விஐயம் மேற்கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  அக்கிராமத்தில்  மீள் குடியேறிய ,  மக்களிடம்  சென்று கலந்துரையாடினார் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(12)  ஜும்மா தொழுகையின் பின்னர் மிக பின்தங்கிய கிராமமான  உள்ள யாழ் பரச்சேரி கிராம மக்கள் எதிர் நோக்கும் வாழ்வாதார காணி நிரந்தரவீடு…

Read More

சர்­வ­தேச மாநாட்டில் ரிஸ்வி முப்தி

பல்­லின மக்கள் வாழும்  இலங்­கையில் சிறு­பான்­மை­யி­ன­ரான  முஸ்­லிம்கள் எவ்­வாறு ஏனைய  இன மக்­க­ளுடன்  சமா­தான சக­வாழ்வு வாழ­வேண்­டு­மென அகில இலங்கை ஐம்­இய்­யத்துல் உலமா சபை  முஸ்லிம் சமூ­கத்தை  அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அதற்­க­மைய  இலங்கை  முஸ்­லிம்கள் அனைத்து இன­மக்­க­ளு­டனும்  நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யாக வாழ்­கி­றார்கள். இலங்கை, முஸ்­லிம்­களின் தாய் நாடு என்­பதில் நாம் உறு­தி­பூண்­டுள்ளோம் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார். நேற்­றுக்­காலை அலரி மாளி­கையில் நடை­பெற்ற, முஸ்­லிம்­களும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­களும், எனும்…

Read More

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் தொடர்பில் – ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்குள் கடந்த சில வருடங்களாக முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மனநிலையுடன் முஸ்லிம் மக்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இலக்காக கொண்டு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தானத்திற்குள் முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாதத்தை பரப்பி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி…

Read More

மோடிக்கு, உவைசியின் விளாசல் (வீடியோ)

மாடு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீரல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அசத்துன் உவைசி அவர்கள் மிகக் கடுமையாக பேசியுள்ளார்கள். மாட்டை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அராஜகங்களை பாராளுமன்றத்தில் ஆதாரங்களுடன் புட்டு புட்டு வைத்துள்ளார். குறிப்பாக உவைசி பேசும் போது, மாட்டை பாதுகாக்கின்றோம் எனக் கொக்கறிக்கும் பிஜேபி எம்பி எம்எல்ஏ க்கள் ஏன் பென்சிலின் ஊரி போட்டுக் கொள்கின்றீர்கள். மாட்டை சாகடித்து அதன் கனையத்தில் இருந்து தான் பென்சிலின் ஊரி தயாரிக்கப்படுகின்றது அது…

Read More

கபூரிய்யா அரபிக் கல்லூரி, பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம்-2016

கபூரிய்யா அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்ஷா அல்லாஹ் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்சியடைகிறோம். காலம் : 14-08-2016 (ஞாயிற்றுக்கிழமை) நேரம் : காலை 09:30 இடம் : அப்துல் கபூர் ஹாஜியார் கேட்போர் கூடம் இன்ஷா அல்லாஹ் காலை 08:30 மணி முதல் பதிவுகளும், சரியாக காலை 09:30 மணிக்கு கூட்ட நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகும். கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்றை கூட்டத்திற்கு மிக மிக அன்பாக அழைக்கின்றொம்….

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத் சபாநாயகரிடம் கோரிக்கை

-சுஐப் எம்.காசிம்  – பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை (12/08/2016) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வருமாறு கௌரவ சபாநாயகர் அவர்களே: பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11/08/2016) இடம்பெற்ற  கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்திலான கேள்வி நேரத்தின்போது, வன்னிமாவட்ட பாராளுமன்ற…

Read More

நள்ளிரவில் மருதானை ஹோட்டலில் மக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத்

-றிஸ்கான் முகம்மட் – நேற்று (10) நள்ளிரவில் கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சாதாரண ஹோட்டலில் அல்பா மஸ்ஜிதுல் ஹிதாயத் பள்ளிவாசல் நிறுவாக குழுவினர்ருடன் அமைச்சர் ரிசாத் பதீயுதின் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதை படத்தில் காணலாம்.

Read More

3 லட்சம் டொலர்களை வைப்பு செய்தால் இலங்கையில் 10 வருட வதிவிட வீசா

இலங்கையில் 3 லட்சம் டொலர்களை வைப்பு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு 10 வருட காலத்துக்கான வதிவிட வீசாவை வழங்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், அந்நியச் செலவாணிகளினை அதிகமாக எமது நாட்டுக்கு கொண்டு வரும் முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசாவினை…

Read More

றிஷாத்தைப் பாராட்டினார் ஹக்கீம்

அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக இருப்பதாகத்…

Read More

பாராளுமன்றத்தில் அமைச்சர் றிஷாத்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வழி காட்டலில் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிய பல நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் நாம் வெற்றிகண்டு வருவதோடு,  நாட்டின் பல பகுதிகளில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிப்புற்று இருந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, சம்மாந்துறை, மஹாஓயா ஆகிய இடங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும்,…

Read More

கிரிக்கெட் போட்டியால் அதிக லாபம் ஈட்டிய இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, அவுஸ்ரேலிய சுற்றுலா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டிக்கான அனுமதி சீட்டுக்கள் விற்பனையிலேயே 2,826,150 ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக…

Read More

1595 முறைப்பாடுகளில் 237 விசாரணைகள் நிறைவு

பாரிய ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு 1595 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 237 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் ஜனவரி மாதம் வரை அரச நிறுவனங்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கிடைத்த முறைப்பாடுகளில் 1049 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அதில் 237 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவுற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், 689 முறைப்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 43 முறைப்பாடுகள் வேறு நிறுவனங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More