“முன்னாள் பிரதமரின் மறைவு பேரிழப்பாகும்” அமைச்சர் றிஷாத்
முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டிற்குப் பேரிழப்பாகுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இடதுசாரிச் சிந்தனையைக் கொண்ட முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயக, தனது அரசியல் வாழ்வை லங்கா சம சமாஜக் கட்சியின் மூலம் தொடங்கினார். பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டமையினால் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அமரர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் அரசியல் வாழ்வில் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார். மிக…
