நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும்
இனி வரும் காலங்களில் இன நல்லிணக்கத்திற்கு பாதகமான சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எற்படா வண்ணம் அனைத்து தரப்பும் நடந்து கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இன நல்லிணக்கம் தொடர்பான விஷேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள இன ரீதியான முரண்பாட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு சுமூகமான நிலைமையை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன நல்லிணக்கம் தொடர்பாக…
