ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு
பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் பெருமானாரையும் குர்ஆனையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞான சார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் அண்மையில் அவர் நடாத்திய ஊடக மாநாட்டில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில் ஏசியுள்ளதையும் தமது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ள அமைச்சர் ரிஷாட், அதற்கான ஆதாரமாக ஊடகவியலாளர் மாநாட்டில் தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கள்…
