கட்டுக்கடங்காதவர்களுடன் பேசிப்பயனில்லை!
இனவாத நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் நல்லாடசி மீதான நம்பிக்கை சிறுபான்மை மக்களிடமிருந்து அற்றுப்போகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேத்ரா தொலைக்காட்சியில் அதன் நடப்பு விவகார பணிப்பாளர் யூ.எல்.யாக்கூபினால் நெறிப்படுத்தப்பட்ட வெளிச்சம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் சிறுபான்மை மக்களின் மன எழுச்சி தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜனநாயக தேசிய முன்னனியின் தலைவர் அமைச்சர் மனோ…
