சதி முயற்சியினால் இடைநிறுத்தப்பட்ட இலவன்குளப்பாதையை புனரமைத்து மீண்டும் திறந்து விடுங்கள் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை
சுயநலம் கொண்டவர்களின் சதி முயற்சியினால் இடை நிறுத்தப்பட்ட புத்தளம் இலவன்குளப்பாதையை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்து கொழும்பு – புத்தளம் – சங்குபிட்டி வழியாக யாழ்ப்பாணத்திற்கு செல்லும் மக்களின் பயணத்தை இலகுபடுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (23) மாலை பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, மகிந்த சமரசிங்க ஆகியோரின் அமைச்சின் கீழான குழுநிலை விவாதத்தில் அவர் உரையாற்றும் போதே இந்தக் கோரிக்கையை விடுத்தார். இலவன்குளப்பாதையை புனரமைப்பதன் மூலம் சுமார் 120கி. மீற்றர் பயணத்தூரத்தில்…
