Headlines

சிலாவத்துறை மீனவர்களின் பிரச்சினைக்கு முடிவு காண கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் விரைவு

மன்னார் சிலாவத்துறையில் ஏற்பட்டுள்ள மீனவர்களின் பிரச்சினையை இழுத்தடிக்காமல் அதற்கு உரிய தீர்வை கண்டு சமூக நல்லிணக்கத்தை பேணுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் நேரடியாக விடுத்த வேண்டுகோளை ஏற்று அந்த பிரதேசத்தின் நிலவரங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் அடுத்த வாரம் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு கடற்றொழில் அமைச்சில் இன்று காலை இது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்…

Read More

கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி 

அண்மையில் இடம்பெற்ற OBA Colombo Annual Get together & Cricket Tournament நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஒட்டமாவடி தேசிய பாடசாலையின் கொழும்பு கிளையின் பழைய மாணவ சங்க தலைவர் தொளபீக், பிரதி தலைவர் சட்டத்தரணி மாஹிர் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகக் குழுவுடன் அமைச்சர் றிஷாத் கலந்துரையாடல்

தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அப்பள்ளிவாயளுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தம்புள்ளை பள்ளிவாயல் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த 14.11.2016 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த பள்ளிவாயலை தற்போது அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்ல தாங்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளபோதும் நகர…

Read More

அ.இ.ம.கா. வின் வளர்ச்சியை இறைவன் உதவியால் யாராலும் தடுக்க முடியாது – சிராஸ் மீராசாஹிப்

அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதிவேக வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத வங்குரோத்து அரசியல்வாதிகளின் சதியே எனக்கும் சகோதேரர் ஜெமீலுக்கும் இடையில் பிரச்சினை உள்ளதாக காட்டும் சமூக வலைத்தளங்கள் ஊடான பொய்ப்பிரச்சாரமாகும் இதனை நான் ஒரு போதும் தெரிவிக்கவில்லை. என்பதுடன் இந்த சமூக வலைத்தளங்களுக்கும் பொய் செய்திகளை சோடிப்பவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பேன் என அகில இங்கை மக்கள் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். “சாய்ந்தமருது இளைஞர்களை ஜெமீல் வழிகெடுக்கிறார்”…

Read More

ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுகின்றது

சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களின் போட்டித்திறன் கொண்ட உற்பத்தி முறைமையினை வலுப்படுத்தி அவற்றை தேசிய மற்றும் ஜரோப்பிய சந்தைகளில் சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தமது அமைச்சு செயற்படுவதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், இதன் மூலம் எமது பொருளாதார இலக்கை அடைந்து கொள்ளுவதற்கான ஒரு உபாய மார்க்கமாக ஜரோப்பிய ஒன்றியத்தின் சலுகை அமைந்துள்ளது என்றும் கூறினார். இலங்கையில் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதற்கான செயற்திட்டம் ஒள்றினை ஜரோப்பிய ஒன்றியம் மற்றும்…

Read More

இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றது!

துருக்கி இலங்கையின்முக்கிய பங்காளர். இலங்கைக்கும்துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட்பதியுதீன் தெரிவித்தார்.கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவதுஅமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக  அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும்   துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலான விசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர். அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட தமது இராஜதந்திர உறவுகளை 68 ஆண்டுகளாகஅனுபவித்து வருகின்றனர். துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டுக்குழு முயற்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்குமிடையிhன கூட்டுடமையின் ஒரு சின்னமாக இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி, நல்லிணக்கம், ,சமாதானம் மற்றும்  சுபீட்சம்  ஆகியவற்றின் பலன்களை முழு மக்கள் அனுபவிக்கின்ற உறுதி செய்யும் ஜனநாயகம், அதன் கட்டமைப்புகள் மற்றும்சட்டத்தின் ஆட்சியினை வலுப்படுத்த ஒரு திறந்த மற்றும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்ற நேரத்தில் இலங்கை துருக்கி –  கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும்பொருளாதார ஒத்துழைப்பு மீதான முதல் சுற்று 26 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகின்றமை முக்கியதுவமானது. தவிர்க்க முடியாத பல்வேறு காரணமாக 26 ஆண்டுகளாக கூட்டுக் குழுவினை கூட்ட முடியவில்லை. இதனால் இருதரப்பு பரஸ்பர வர்த்தக மட்டம்  மற்றும் சர்வதேச தளம் மீதான வலுவான இருதரப்புஒருங்கிணைப்புக்கிடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்பட்டது. என்றாலும், 2012 -2013 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அங்காராவிலும் கொழும்பும்பிலும் வதிவிட தூதரகங்கள் நிறுவப்பட்ட பின்னர்குறிப்பாக இலங்கை மற்றும் துருக்கி இடையே உறவுகள் முறையே தழைத்தோங்கின. 2015 ஆம் ஆண்டு துருக்கி- இலங்கையிடையிலாக  இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தெற்காசிய சந்தையில் இலங்கையின் பொருளாதாரமானது முதலீடு மற்றும்வர்த்தகம் மீதான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இன்று, இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆர்வமாக உள்ளதுடன் துருக்கி போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து அதன்பொருளாதாரத்தை விருத்திசெய்ய  விரும்புகிறது.; நம் நாட்டு மக்களின்  அபிலாஷைகளுக்காக நாட்டின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நேரத்தில் முதல் முறையாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒருமித்து, ஒரு சம்மதத்துடன் பொதுவானவிடயங்கள்  மீதான செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இது…

Read More