சிலாவத்துறை மீனவர்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து மகிந்த அமரவீரவிடம் ரிஷாட் பிரஸ்தாபம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மீன்பிடி அமைச்சர் உறுதி
தென்னிலங்கை மீனவர்களுக்கு மன்னார் சிலாவத்துறை காயக்குழி பாடுவில் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை முறைகேடான நடவடிக்கை என கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் மகிந்த அமரவீரவிடம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று 10 சுட்டிக்காட்டினார். தென்னிலங்கை மீனவர்கள் பாடுகளை அமைத்து கொட்டில்களைக்கட்டி அந்தப்பிரதேசத்தை உரிமையாக்குவதன் மூலம் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க நேரிடுமென அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல்வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் கொழும்பில் இருந்து கொண்டு மன்னார் கடல்…
