அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்களாதேஷ் அமைச்சர் டொஃபைல் அஹமட் பங்கேற்பு
பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (8) காலை கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. கைத்தொழில் வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பங்களாதேஷ் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் டொஃபைல் அஹமட்டும் பங்கேற்று நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு கூட்டு ஆணைக்குழுவின் அமைச்சு மட்டத்திலான…
