Headlines

துபாய் விமான தீவிபத்துக்கு விமானத்தின் சக்கரங்கள் தரை இறங்கும்போது செயல்படாததே காரணம்

துபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் நிறுவன விமானம் தரைஇறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. பயணிகள் அவசரகால வழிகளில் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர். மீட்புப்பணியில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலியானார். இந்த விபத்துக்கான காரணம் பற்றி துபாய் விமான போக்குவரத்து ஆணையத்தின்…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது வருடாந்த மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை  கொழும்பு கம்பெல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது . அனைத்து தேர்தல் தொகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ஐhதிக சேவக ஊழியர்கள் சங்கம் மகா நாடு தொடர்பாக தெரிவிக்கையில் 30ற்கும் மேற்பட்ட தொழிற்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மகா நாட்டில கலந்து கொள்ள உள்ள விருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு…

Read More

மலேரியா அற்ற நாடாக இலங்கை பிரகடனம்

இலங்கையை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தியுள்ளது கொழும்பில் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் வருடாந்த மாநாட்டில் இதற்கான சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனத்தின்  பணிப்பாளர் நாயகம் மார்க்ரெட் சென் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று கையளித்தார்.

Read More

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சமிந்த பெரேரா ஆகிய இருவரின் விளக்கமறியலும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீதிக்கப்பட்டுள்ளது. பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடரபுடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவ்விருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே,…

Read More

வித்தியா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை கோரிய சந்தேகநபர்

மரபணு பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் வாசித்து காட்டினால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து தான் விடுபட சாத்தியமுள்ளது என நீதவானிடம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவர் கூறியுள்ளார். குறித்த படுகொலை தொடர்பான வழக்கு நேற்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்றிற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 12 சந்தேக நபர்களையும் நோக்கி நீதிவான் ஏதாவது உங்கள் சார்பாக விண்ணப்பங்களை மேற்கொள்ள உள்ளீர்களா? எனக் கேட்டார். இதன்போது 5வது…

Read More

2017ஆம் ஆண்டு தேர்தல் – பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த மாதம் 15ஆம் திகதியுடன் எல்லைநிர்ணயங்கள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017இல் நடைபெறும் என்று இறுதியான முடிவை அறிவித்தார்.

Read More

‘தேர்தல் பிற்போட்டமைக்கு மக்களே பொறுப்பு’

-பாநூ கார்த்திகேசு – ‘தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு தேர்தல்கள் செயலகமோ, நானோ காரணமல்ல. மக்களும் நீதிமன்றமும் அரசியற்தலைவர்களுமே இதற்கு பொறுப்பு கூறவேண்டும்’ என, தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்தார். தேர்தல் திணைக்களத்தின் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ‘தேர்தலை நடத்துமாறு, நீதிமன்றம் அனுமதியளிக்காத பட்சத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எல்லை நிர்ணயமானது, உரிய முறையில்…

Read More

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாங்க வாகனத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிலேயே இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் : ஜனாதிபதி

எதிர்காலத்தில்இடம்பெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார். அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள்நேயக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றிபெறச் செய்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நேற்று பிற்பகல் திறந்துவைத்த போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு…

Read More

பல்கலை முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத்தெரிவு!

VTM. IMRATH- பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும் என்ற நீண்டகால வேண்டுகோளின் விளைவாக, ஏற்கனவே பல்கலைக்கழக வளாகங்களில் இயங்கிவரும் முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒன்றிணைத்த ஒரு குடை அமைப்பாக உருவாக்கப்பட்டதுதான் ஒம்சா (AUMSA) எனப்படுகின்ற அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமாகும். 2002 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, சுனாமிக்கு பிற்பட்ட மீள் குடியேற்ற காலத்தில் ஓர் இயங்கும் படையாக உருவெடுத்து, பல்வேறு சமூக நல விடயங்களில் பங்காற்றிவிட்டு காலவேட்டத்தில்…

Read More

தவறான சமிக்ஞையை வழங்கிவிடக்கூடாது!

-நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழுகை அறை மூன்றாவது முறையாக தாக்குதலுக்குள்ளான சம்பவம் இரு தினங்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில் இனம்தெரியாத சிலர் தொழுகை அறையை தாக்கி அதற்குள்ளிலிருந்த மின் விசிறிகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் படிக்கும் சுமார் 650 முஸ்லிம் மாணவர்களுக்கு ஐவேளை தொழுகையை நிறைவேற்றுவதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஒதுக்கப்பட்ட பத்து பத்தடியிலான அறையே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் நாட்டுக்கு வழங்கும்…

Read More

கனடாவில் விபத்து – தாயும், மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர்…

Read More