Headlines

போலி நிறைகள் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் மீட்பு

போலியாக நிறையிடப்பட்ட நிலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ஒருதொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் பேதுருதுடுவ பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 100 கிராம் என நிறையிடப்பட்டுள்ள பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 85 கிராமாகவும், 190 என நிறையிடப்பட்ட பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 180 கிராமாகவும் இருந்ததாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனவே, அந்த பிஸ்கட் பக்கற்றுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த நிறுவனம் மற்றும் அதன்…

Read More

கைத்தொழில் பேட்டைக்கு சீனா முன்மாதிரி

இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்குள்ள கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

Read More

இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

ஒப்பந்த காலத்துக்கு மேல் சட்ட விரோதமாக பணிபுரிந்த 71 இலங்கை  பணிப்பெண்களை குவைத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Read More

பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வில் சையத் சகில் ஹிசைன்

தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுடனான அரசியல் பொருளாதார காலாசார நகர்வுகளே எமது பிராந்திய எதிர்கால நகர்வுகளை தீர்மானிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத் சகில் ஹிசைன் தெரிவித்தார். பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினமான இன்று (14) கொழும்பில் அமைந்துள்ள பாக்கிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

Read More

அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி – மஹிந்தவுடனும் பேச்சு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவுள்ளார். அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

Read More

புல­மைப்­ப­ரிசில் பரீட்சை மாண­வ­ருக்­கான பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை

எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் ஐந்தாம் தரப் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்குத் தோற் றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக வகுப்­புக்கள், கருத்­த­ரங்­குகள் நடத்­து­வ­தற்கு தடை­செய்­யப்­பட்­டுள்ளதாக பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 21 ஆம் திகதி புல­மைப்­ப­ரிசில் பரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது. இத­னை­யிட்டே இத் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி பரீட்­சார்த்­தி­க­ளுக்கு பிரத்­தி­யேக வகுப்பு, கருத்­த­ரங்கு, விரி­வுரை, பயிற்­சிப்­பட்­டறை, மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிட்டு விநி­யோ­கித்தல் மற்றும் பதா­தைகள் ஒட்­டு­வது, துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வழங்­கு­வது, தொலைக்­காட்சி வானொலி விளம்­ப­ரங்கள் ஆகி­ய­வற்­றுக்கு…

Read More

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் மாயம்

கொழும்பில் இருந்து யாத்திரீகர்கள் சிலருடன் யாத்திரைக்காக சென்ற முதியவர் ஒருவர் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தை ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர என்ற முதியவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

ஓட்ட போட்டியில் முதல் இடம்பெற்ற மாணவனுக்கு அமைச்சர் றிஷாட் பாராட்டு!

-றிஸ்கான் முகம்மட் – இன் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் கைத்தொழில் வர்க்க அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது இன் நிகழ்வில் கிழக்கு மாகாண ரீதியில் 5000 மீட்டர் ஓட்ட போட்டியில் முதல் இடம் பெற்ற கல்முனை அல்/பஹ்ரியா மாக வித்தியாலய மாணவன் முகம்மட் அல் அஸ்ரால்ளுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிஷாட் பதீயுதின் பாராட்டியதுடன் இவருடைய எதிர் கால முயற்சிக்கு…

Read More

அமைச்சர் றிஷாத் அங்கம் வகிக்கும் வடக்கு மீள் குடியேற்ற செயலணி

பாராளுமன்றத்தில் கடந்த 10.08.2016 அன்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசும் போது ரிஷாட் பதியுதீன் அங்கம் வகிக்கும் வட மாகாண மீள் குடியேற்ற செயலணி மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என அவர் கேட்ட கேள்வி ஆச்சரியத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் கொண்டதாக உள்ளது. 1990 ஆம் ஆண்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட 90,000 வடபுல முஸ்லீம் அகதிகள் ஒருபுறம் இருக்க 2009 இல் இடம் பெயர்ந்த…

Read More

கொழும்பு போட்சிட்டி சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் இடையிலான நிதிமையமாக செயற்படும்

சீனாவினால் நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு போட்சிட்டி உரிமை தொடர்பில் ஆங்கில சட்டங்கள் பின்பற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இது தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க, பிரித்தானிய குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். போட்சிட்டி என்ற இந்த நிர்மாணம் நிதிநகரம் என்ற பெயரில் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் அமைக்கப்படுகிறது. இது சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான நிதிமையமாக செயற்படும் என்று ரணில் தெரிவித்துள்ளார். இந்தநிகழ்வில், தெலுங்கானா வணிக அமைச்சர்…

Read More