சீனா செல்கிறார் பிரதமர் ரணில்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 12ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை எதிர்வரும் 12ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளார்.
பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் 24 மணித்தியாலயங்களுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோஹன் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறித்த ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வொன்றை பெற்று, அவர்களை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் தொடர்ந்து 11 நாட்களாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-லியோ நிரோஷதர்ஷன் – அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான துணை செயலாளர் சாள்ஸ் எச். ரிவ்கின் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.
முஸ்லிம்களின் உணவு தொடர்பில் கடந்த காலங்களில் சில தரப்பினர் விமர்சனங்களை ஏற்படுத்தினர். அதனை ஹலால் பிரச்சினையாகக் கொண்டு வந்தனர். எனினும் முஸ்லிம்களுக்கு ஹலால், ஹராம் என்கின்ற இரு விடயங்கள் உள்ளன. ஹலாலானவற்றை உண்பதற்கே அவர்களுக்கு சமயத்தில் அனுமதியுண்டு. இஸ்லாம் சமயத்தின்படி மதுபானம் அருந்துவது ஹராமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மதுபானம் பாவிப்பதில்லை. அது வரவேற்கத்தக்க விடயமாகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ‘மதுசாரமற்ற இலங்கை’ எனும் தொனிப்பொருளிலான தேசிய மாநாடு நேற்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு…
பொரளஸ்கமுவ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது இன்று சனிக்கிழமை (06) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்குள் புகுந்த இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் பள்ளிவாசலில் பணியாற்றும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Forum for National Unity என்ற அமைப்பினால் நேற்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை பாராட்டுவதற்காக, வெள்ளவத்தை The Excellency மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் ஜம்மிய்யதுல் உலமா தலைவர் உரையாற்றுகையில், ISIS என்பது இஸ்லாத்துக்கு முரணான அமைப்பு என்றும் அவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஆணித்தரமாக தெரிவித்தார். இதே வைபத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.ஸுஹைர் உரையாற்றுகையில், முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலியர் செய்துவரும் சூழ்ச்சிபற்றியும் குறிப்பிட்டார். போலி ஈரானிய பாஸ்போட்டில்…
கிக்ஆஸ் டொரண்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரண்ட்ஸ் தேடல் இணையதளமான டொரண்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரண்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டொரண்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் லாக் இன் செய்ய முயல்பவர்களுக்கு “டொரண்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்…சென்று வருகிறேன்” என்ற செய்தி மட்டுமே பதிலாக கிடைக்கிறது.
இரு கால்களும் செயலிழந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் ஒருவர் அங்கு தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு முகாமைத்துவ, வர்த்தகத்துறை பட்டதாரியாகியுள்ளார். மாத்தறை தெலிஜ்ஜவில என்ற இடத்தைச் சேர்ந்த கசும் சாமர என்ற இந்த இளைஞர் தனது பட்டப்படிப்பை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்கள் செயலிழந்த நிலையில், அவரது தாய் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் அங்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில்…
தரம் 05இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 21ஆம் தகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான நாட்களில் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல் மாத்திரமின்றி, அதுதொடரபான பதாகைகள், துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல், ஊடகங்கள் ஊடாக பிரசாரங்கள் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
-நாச்சியாதீவு பர்வீன் – அநுராதபுரம் மாவட்டத்தின் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் பெளதீகவளக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கெளரவ அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 04 கல்வி வலயங்களில் உள்ள 30 தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை இன மக்களிற்கு கிடைக்காத பெரும் நன்மையை அநுராதபுர…