Headlines

வெள்ளத்தில் மூழ்கியது பேலியகொடை மத்திய மீன் சந்தை

பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வாயிற் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று(16) அதிகாலை பொருட்களை கொண்டு வந்த லொறிகளும், மீன்கள் கொண்டுவந்த லொறிகளும் சந்தையின் உட்பகுதிக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதாக பேலியகொடை மீன் சந்தை சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வெள்ள நிலைமை காரணமாக மத்திய மீன் சந்தைப் பகுதியின்…

Read More

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

அதிக மழை காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள சில பாடசாலைக்கு இன்று (16) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வலயக் கல்விப் பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார். மன்னார் நகர் மற்றும் முசளி பகுதியில் வௌ்ளம் புகுந்துள்ள பாடசாலைகளுக்கே இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read More

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? இன்று வாக்களிப்பு

தமிழகம், புதுவையில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 07.00 மணிக்குத் தொடங்கி மாலை 06.00 மணிவரை இடம்பெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 5.77 கோடி வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் 3,728 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது என…

Read More

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக்கே உரியது என்கிறார் மேர்வின்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் படத்தை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் காட்சிப்படுத்துமாறு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் இவ்வாறு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பெயரில் மேர்வின் சில்வாவால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என கூற முடியாது என இதன்போது குறிப்பிட்ட அவர், அந்த உரிமை…

Read More

கொழும்பு பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு பூட்டு

கொழும்பு – 7 இல் அமைந்துள்ள எஸ்.ரி பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என அந்தப் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Read More

3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன என்று விமான நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

2 பேர் மரணம்; நால்வர் மாயம்; 7,090 பேர் பாதிப்பு

வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது தலைகாட்ட விடாது பேய் மழை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு 30 வீடுகளின் கூரைகள்; அள்ளுண்டன நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு…

Read More

ரோஸியின் மனு தள்ளுபடி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான ரோஸி சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின், விருப்பு வாக்குகளை மீளவும் எண்ணுமாறு கோரியே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார்

Read More

தேர்தல் இடாப்பு திருத்த மாதிரி படிவ விநியோகம்

2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்கான மாதிரி படிவம் விநியோகம் இன்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். கிராமசேவகர் அதிகாரிகள் மூலம் இந்த தேர்தல் இடாப்பு மாதிரி படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த வருடம் ஜூன் முதலாம் திகதிக்கு 18 வயதை பூர்த்தியாகும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் வாக்காளர் இடாப்பு பத்திரத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்வதற்கு முடியுமாகின்றது. அத்துடன் பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி இடாப்பு…

Read More

மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததில் குழந்தை பலி

வீடொன்றுக்குள் மழை நீர் புகுந்ததில் 8 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் வத்தளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Read More

புத்தளம் – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வென்னப்புவ ரயில் பாதையின் – சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து காரணமாக, புத்தளம் – கொழும்பு ரயில் சேவைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கொழும்பு – புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மக்களுக்கு அவசர நிவாரணம்! றிஷாத்தின் கோரிக்கையை ஏற்று யாப்பா உடன் நடவடிக்கை

– சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, குறிப்பிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா அவசர பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (16/05/2016) காலை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பாவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்,…

Read More