Headlines

மீளக்குடியேறிய மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காசிம் – மன்னாரில் பிரசித்திபெற்ற முசலிப் பிரதேசத்திலே, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கு ஒரு வசதியான மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த கிராமங்களுக்கு அண்மித்ததாக அமைந்துள்ள அளக்கட்டு எனும்  பிரதேசத்திலேயே இந்த மாதிரிக் கிராமத்தை அமைச்சர் றிஷாத் அமைத்து வருகின்றார். இந்த அளக்கட்டு எனும் புதிய கிராமத்தில் வேப்பங்குளம், பி.பி பொற்கேணி, எஸ்.பி பொற்கேணி, அகத்திமுறிப்பு, பிச்சைவாணியன் குளம் ஆகிய கிராமங்களில் இருந்து 199௦ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, தென்னிலங்கையில் வாழ்ந்த மக்கள்…

Read More

சாய்ந்தமருது நகரசபையை வலியுறுத்தி, சத்தியாக்கிரகம் இருப்போம் – ஜெமீல்

– எம்.வை.அமீர் – கடந்த தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்ட, சாய்ந்தமருது மக்களுக்கான நகரசபையை சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக வழங்க முன்வரவேண்டும். எதிர்வரும் றமழானுக்கிடையில் குறித்த நகரசபையை வழங்காது விடப்படுமானால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக, பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துவோம். என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான, கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். சாய்ந்தமருதில்…

Read More

பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றமடையும் தெஹிவளை மிருகக்காட்சி சாலை

தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு சிறந்த பொழுது போக்கு பூங்காவாக மாற்றப்படவுள்ளதாக நிலையான வளர்ச்சி மற்றும் வனவிலங்குகள் அமைச்சு காமின ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இதற்கான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வுகளை சரியான முறையில் மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் விற்பனைசெய்யத் தடை

அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை சுற்றிவளைத்து முற்றுகையிட, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சுற்றிவளைப்பானது அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என, அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை கையடக்கத்தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும் எனவும், சில இடங்கள் அனுமதிப் பத்திரம் இன்றி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு…

Read More

வெசாக்கை முன்னிட்டு தலைகள் வெளியீடு

வெசாக் தினத்தை முன்னிட்டு 3 விசேட தபால் தலைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெவ்வேறு வகையான மூன்று தூபிகள் அம்முத்திரைகளில்  பிரசுரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முன்மொழிவுகளை பௌத்த சாசன அமைச்சு முன் வைத்துள்ளது. இது தொடாபான கலந்துரையாடலில் தபால்துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உள்நாட்டமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டதாக தபால் துறை அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Read More

அனைத்து முன்பள்ளிகளையும் மூடத் தீர்மானம்

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு கிழக்குமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவின் தோல்விக்கு காரணமாவர்கள் இவர்களா?

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு மேர்வின் சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் முத்துஹெட்டிகம ஆகியோரின் செயல்பாடுகளே காரணம் என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கமன்பில  தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ராஜித சேனரத்னவும் மற்றும் துசித்த ஹல்லோளுவவும் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி இரண்டு வருடங்களாக இரகசியமாக திட்டமிட்டு செயற்பட்டதன் விளைவாகவே நடைபெற்றது என தெரிவித்திருந்தனர். இதற்கு அமைய மேர்வின் சில்வா,…

Read More

ஹெரோயின் கடத்தல் முறியடிப்பு

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படவிருந்த ஹெரோய்ன் கடத்தல் முயற்சிமுறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சுங்க அதிகாரிகள் இந்த ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். கராச்சி விமான நிலையத்தில் வைத்து இந்த போதைப்பொருள் தொகை நேற்றுமீட்கப்பட்டுள்ளது. இதன்போது பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 3.4 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திய மூன்று பாகிஸ்தானியர்கள்கடந்த வாரத்தில் இலங்கையில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அம்பாறை இளைஞர் ஊடகப் பேரவை அமைப்பு உதயம்

இளம் ஊடக செயற்பாட்டாளர்களின் ஊடகம் சார் வலுவினை மேம்படுத்தும் நோக்கில் அம்பாரை மாவட்டத்தினை மையப்படுத்தி இளைஞர் ஊடகப் பேரவை Youth Media Forum (YMF) எனும் பெயரில் ஊடகம் மற்றும் இளம் ஊடக செயற்பாட்டாளர்களுக்கான அமைப்பு உதயமாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை (30) இரவு மருதமுனையில் நடைபெற்ற இளம் ஊடக செயற்பாட்டாளர்களுக்கிடையேயான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட தீர்மாணத்திற்கமைவாகவே இளைஞர் ஊடகப் பேரவை உருவாகியுள்ளது. இதன் போது நிர்வாகத் தெரிவு, செயற்திட்டத் தயாரிப்பு உள்ளிட்ட ஏனைய அமைப்பியல் விடயங்கள் இடம்பெற்றதோடு,…

Read More

தம்புள்ளை பள்ளியை புதிய இடத்தில் நிர்மாணிக்க வக்பு சபை அனுமதி

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்து அகற்றி நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தம்­புள்ளை நக­ருக்கு அண்­மையில் வழங்­க­வுள்ள காணியில் புதி­தாக நிர்­மா­ணித்துக் கொள்­­வ­தற்கு வக்­பு ­சபை பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. வக்பு சபை அங்­கத்­த­வர்­க­ளுக்கும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களை அடுத்தே வக்­பு­சபை இந்த அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ளது. ‘தம்­புள்ளை நக­ருக்கு அண்­மையில் பள்­ளி­வா­ச­லுக்கு நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை காணி வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளதால் வச­தி­யான ஒரு பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்துக் கொள்­ள­மு­டியும். தற்­போது பள்­ளி­வாசல்…

Read More

நாடு முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும்  வைத்திய அதிகாரிகள் இன்று ஒரு மணி நேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் வைத்திய கல்லூரியை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மேலும் குறித்த மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று நண்பகல் உணவு இடைவேளையின் போது அரச வைத்தியர்களால்…

Read More

குழந்தையை பலியெடுத்த எறும்பு

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த 29 ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை மூச்சுத்திணறலால் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று (2) அதிகாலை வேளையில் அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த தாதிகளிடம் இதுபற்றி கூறியுள்ளார். எறும்புகளை தாதியர்கள் துடைத்தபோது குழந்தைக்கு பொருத்தப்பட்டிருந்த குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின்…

Read More