Headlines

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்

01. 2008 மற்றும் 2009 காலப்பகுதிக்கு வழங்கப்படவென 20008.06.29ஆந் திகதிய 1565ஆம் இலக்க வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்ட 424 மௌலவி ஆசிரியர் நியமனத்தில் எஞ்சிய 274 நியமனங்களும் காலதாமதமின்றி அவசரமாகவழங்கப்படல் வேண்டும். 02.தாபன விதிக்கோவையின் அத்தியாயம் ஓஐஐ பிரிவு 23:1 மற்றும் 23:2 என்பன ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் வெளிநாட்டு விடுமுறைமுழுமையாக அனுமதிக்கப்படல் வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள் பெறும் ஹஜ் விடுமுறை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரால், தாபன விதிக்கோவைக்கு மேலதிகமாக“ஆளுநரின் குறிப்பு 06ஃ2011பிரிவு 03”…

Read More

மே தினம் மறக்கக் கூடாத வரலாறு! (கட்டுரை)

– S.சஜீத் – இப்போதெல்லாம் அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறோம். அப்பாவும், பல வீடுகளில் அம்மாவும் மற்றொரு பக்கம் வேலைக்கு ஓடுகிறார்கள். மாலையில் அனைவரும் களைத்துப்போய்விடுகிறோம். ஆனால் அம்மா மட்டும் வேலைக்குச் சென்று வந்தாலும்கூட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது. ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு…

Read More

உழைக்கும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க குரல் கொடுப்போம்!

ஒரு நாட்டின் அபிவிருத்தியில் உழைக்கும் மக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். அந்த வகையில் மலையக உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தமிழ் முற்போக்கு கூட்டணி துணிந்து குரல் கொடுக்கும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தமது செய்தியில், மலையக மக்களின்…

Read More

ஹெரோய்னுடன் பாக். பிரஜை கைது

பாகிஸ்தான் பிரஜையொருவர் ஹெரோய்னை விழுங்கிக் கடத்துவதாகக் கிடைத்த தகவலையடுத்து, டுபாயிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பாகிஸ்தான் பிரஜையொருவரை போதைப்பொருள் பொலிஸ் தடுப்பு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

Read More

காலி கூட்டத்தில் மஹிந்த

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டைக்கு முன்பாக சமன விளையாட்டு மைதானத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்துக்காக மூன்று மேடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கலாசார நிகழ்வுகளுக்காக பாரிய மேடையொன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களுக்காக மற்றுமொரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைகளுக்கு அருகில் பாரிய வரவேற்பு பதாகையொன்றும் கட்டப்பட்டுள்ளது. அதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படமும் முன்னாள் ஜனாதிபதிகளின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்பு, கிருலப்பனை கூட்டத்துக்கு செல்வதாக அறிவித்துள்ள…

Read More

பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி

ஊழியப் படையினரின் பங்களிப்பு பெறுமதி வழங்கும் தினமாக இன்றைய மே தினம் கருதப்படுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறுகையில்; உழைக்கும் மக்கள் முழு சமூகத்திற்கும் ஆற்றிவரும் சேவைக்கு நன்றி பாராட்டும் நோக்கில் மே தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பிற்கு பெறுமதி வழங்கும், அவர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும், அது தொடர்பிலான ஆக்கபூர்வமாக ஊடாடல்களை மேற்கொள்ளும் ஓர் தினமாக மே தினம்…

Read More

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் எதிர்ப்பார்ப்பு நிறைவேற்றப்படும்: பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச எதிர்பார்த்த மக்கள் ஜனநாயகத்தை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ரணசிங்க பிரேமதாசவின் 23 வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கட்சிக்குள் கட்சியை திருத்தி அமைக்க முடியும். சிலர் இனவாதத்தை பரப்ப முயற்சித்து வருகின்றனர். ஜனாதிபதி பிரேமதாச உயிருடன் இருந்திருந்தால், நல்லாட்சிக்கு தனது கூடியளவு ஒத்துழைப்புகளை வழங்கியிருப்பார் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக கொழும்பு நகரின் வீதிகள் சிலவற்றை மூடுவதற்கு நேரிடுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும் சில வீதிகள் ஊடான வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கும் நேரிடும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மாளிகாவத்தை பிரதேசத்தில், பிரதீபா மாவத்தை, ஜும்ஆ மஸ்ஜித் சந்தியிலிருந்து சங்கராஜ சுற்றுவட்டம் வரையான வீதிகள் மூடப்படவுள்ளன. பிற்பகல் ஒரு மணிமுதல்…

Read More

அமைச்சர் றிஷாதின் மேதின செய்தி

– ஊடகப் பிரிவு – உலகம் முழுவதிலும் உழைக்கும் பாட்டாளி மக்கள் மே 1 ஆம் திகதியான இன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டடுகின்றனர். இன்றைய தினத்தில் இலங்கை மக்களாகிய நாமும் இணைந்து கொண்டு அந்தத் தினத்தை அனுஷ்டிக்கின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிக்காகோ நகரில் சுரங்கத் தொழிலாளர்கள் நடாத்திய போராட்டத்தின் விளைவே தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு…

Read More

நான் செல்கின்றேன் இனி வரமாட்டேன் ; ரயிலில் மோதி பலியான மாணவியரின் அதிர்ச்சி பதிவுகள்

பம்­ப­ல­ப்பிட்டி முதல் தெஹி­வளை வரை­யி­லான கரை­யோர ரயில் பாதை தொடர்பில் புதி­தாக விளக்கம் ஒன்றும் அவசி­ய­மில்லை. ஏனெனில் இந்த தண்­ட­வா­ளப்­ ப­கு­தியில் அடிக்­கடி ரயிலில் மோதி பலர் உயி­ரி­ழப்­பது தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளது. கவ­ன­யீனம் கார­ண­மா­கவும் அவ­தா­ன­மின்­மை­யுமே இந்த உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு கார­ணங்கள் என கடந்த கால சம்பவங்களை வைத்து பொலிஸார் கோடிட்டு காட்­டு­கின்­றனர். இந் நிலையில் தான் கடந்த 25ம் திகதி அதே கரை­யோர ரயில் மார்க்­கத்தில், தெஹி­வளை ரயில் நிலை­யத்தை அண்மித்த பகு­தியில் ரயிலில்…

Read More