Headlines

கழுகை கொலை : மேலும்ஆறு பேருக்கு விளக்கமறியல்

காலி ஹபராதுவ – பம்பகல பாலத்துக்கு அருகில் கழுகு ஒன்றை உயிருடன் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபர்கள் 6 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் காலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சந்தேகநபர்கள் வந்சாவல மற்றும் கந்துருதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முன்னதாக, இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே…

Read More

எண்ணெய் கலப்படம் செய்தவருக்கு அபராதம்

தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணையைக் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட எண்ணெய் வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி 5 ஆயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளார். பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பிக்க ராஜபக்ச முன்னிலையில் நேற்று மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை மாநகரில் எம். சத்தியசீலன் என்ற எண்ணை வியாபாரிக்கே, மேற்படி தண்டனை வழங்கப்பட்டதாகும். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, குறிப்பிட்ட நபருக்கெதிராக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில்…

Read More

14 நாட்­க­ளுக்குள் தேர்தல் அறி­விக்­கப்­பட வேண்டும்

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்­சியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இது தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்த தினேஷ் கு­ண­வர்­தன எம்.பி, இன்­றி­லி­ருந்து பதி­ன்நான்கு நாட்­க­ளுக் குள் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட வேண்டும் அவ்­வாறு அறி­விக்­காத பட்­சத்தில் அடுத்த பாரா­ளு­மன்ற அமர்வின் போது தேர்தல் திகதி தொடர்பில் கேள்வி எழுப்­புவோம். கடந்த ஜன­வரி எட்டாம் திகதி…

Read More

கரும்புத் தொழிலாளி சடலமாக மீட்பு

கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­படச் சென்ற தொழி­லாளி , சேனை வாடி­யொன்­றி­லி­ருந்து, சட­ல­மாக புத்­தல பொலி­ஸா­ரினால் நேற்று மீட்­கப்­பட்­டுள்ளார். பசறைப் பகு­தியின் கமே­வலை தோட்­டத்­தி­லி­ருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­ப­டச்­சென்ற எஸ்.சண்­முகம் என்ற 46 வயது நிரம்­பிய தொழி­லா­ளியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். இவ­ரது சடலம், வைத்­திய பரி­சோ­த­னைக்­காக, புத்­தல அர­சினர் மருத்­து­வ­மனை பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது. இம் மரணம் இயற்கை மரணமா? அல்­லது கொலையா? என்­பது குறித்து, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

மைத்திரி – மஹிந்த இணைய சாத்தியமில்லை : விக்ரமபாகு

மைத்திரி -மஹிந்த ஒருபோதும் இணையப்போவதில்லை. இருவரதும் கொள்கைகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகின்றது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

Read More

மின்­சாரம் தாக்கி சிறுவன் பலி

பகல் வேளை உணவின் பின்னர் பால் தேநீர் தயா­ரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன் மின்­சாரம் தாக்கி பரி­தா­ப­க­ர­மாக பலி­யா­கி­யு­ள்ளான். இச்­சம்­பவம் கடந்த திங்­கட்­கி­ழமை தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தங்­கொட்­டுவ பிர­தே­சத்தில் உள்ள பாட­சா­லை­யொன்றில் தரம் – 6 இல் கல்வி கற்கும் தங்­கொட்­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த மல்­லிக ஆராச்­சிகே செனால் தேசான பெரேரா என்ற சிறு­வனே மின்­சாரம் தாக்கி பலி­யா­ன­வ­னாவான்.

Read More

‘நான் பௌத்த தர்மத்தை கடைப்பிடிப்பவன்’

அரசன் அர­சனைப் போல் உண­வ­ருந்த வேண்டும். ஜனா­தி­பதி தன் சிறப்­பு­ரி­மை­களை அனு­ப­விக்க வேண்டும். அதை­வி­டுத்து கிராம சேவ­கரைப் போல் செயல்­ப­டக்­கூ­டாது என என்னை விமர்­சித்­துள்ளார். ஆனால், நான் இதற்கு தயா­ரில்லை. அனை­வ­ருக்கும் சம அந்­தஸ்து என்ற பௌத்த தர்­மத்தை கடைப்­பி­டிப்­பவன் நான் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

Read More