Headlines

தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

– அழகன் கனகராஜ் – சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

‘புபுது இந்திக்க’ கைது

பாதாள உலகத்தைச் சேர்ந்த இந்திக்க மல்லி என்ற புபுது இந்திக்க உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ, றாகம மற்றும் ரன்தோலுகம ஆகிய பிரதேசங்களில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

பொன்சேகாவின் நியமனத்தை எதிர்த்து மற்றுமொரு மனு தாக்கல்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினர் நியமித்தது செல்லுபடியற்றது என அறிவித்து உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான மேஜர் அஜித் பிரசன்ன உயர்நீதிமன்றத்தில் இன்று (11) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடாத அவரை நாடாளுமன்ற உறுப்பினரான நியமித்துள்ளதன் மூலம் அந்த கட்சி மக்களின் உரிமையை மீறியுள்ளதாக மனுதார் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மட்டக்களப்பு மாணவி புதிய கண்டுபிடிப்பு!

மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார். என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் பலருக்கு உள்ள எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்துள்ளார். இந்த இயந்திரமானது வீட்டில் உள்ள பாவனைக்கு உதவாத கழிவு பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியின் போது இரண்டாம் இடத்தினையும், மட்டக்களப்பு மட்டத்தில்…

Read More

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவே தம்மாலோக தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலஞ்சென்ற அஸ்கிரி பீட மகாநாயக்கர் அத்ததஸ்ஸி தேரரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறிய உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றை கோரியிருந்தார். விடயங்களை பரிசீலனை செய்து பார்த்த கொழும்பு நீதவான்…

Read More

மருந்து முன்னேற்றம் குறித்து ஆராய குழு நியமிப்பு

நாடு பூராகவும் உள்ள மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக மருந்து முன்னேற்றம் குறித்த பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம், மருந்து விநியோக பிரிவு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் குறித்த குழுவில்…

Read More

சதொசவில் ஊழல் நடைபெற்றதாக கூறுப்படுவது அப்பட்டமான பொய் – டாக்டர் ரொஹாந்த

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக கூறப்படுவது ஓர் அப்பட்டமான பொய்யென்று சதொச நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரொஹாந்த அத்துக்கோரள அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்ற போது ரூபா 15 கோடி நஷ்டத்தில் அந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் தொழிற்பாடுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக KPMG நிறுவனம் பணிக்கமர்த்தப்பட்டது. அந்த நிறுவனம்…

Read More

கெகிராவை வாகன விபத்தில் 9 வயது சிறுவன் பலி

கெகிராவ பல்லேவெதியாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகன விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறியரக பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பில் குறித்த வாகனங்களின் சாரதிகள் இருவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More

அர் – றஹ்மா நலன்புரி சங்கத்தினால், சீருடை வழங்கும் நிகழ்வு

– மௌலவி முஹம்மட் றிஸ்வி (அல்-அஷ்ஹரி) – பொலன்னறுவை மாவட்டத்தில் கதுருவெல குசும்கம எனும் பிரதேசத்தில் பொது நோக்காக சுமார் 2 மாதமாக தமது பொதுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள அர்-றஹ்மா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள மற்றுமொரு செயற்பாடாக தமது ஊரிலுள்ள இளம் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக்கொடுக்கும் குர்ஆன் (மக்தப்) மதரசாவிற்கான அனைத்து குறைகளையும் தங்களால் முடியுமான வரை நிறைவு செய்து இலவசமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பிள்ளைகளுக்கு சீருடை வழங்கும்…

Read More

“குளுகோமாவை தோற்கடிப்போம்”

உலக குளுகோமா வாரத்தை முன்னிட்டு ”குளுகோமாவை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாதயாத்திரை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) முற்பகல் இடம்பெற்றது.   கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இப்பாதயாத்திரை விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகி தேசிய கண் வைத்தியசாலை வரை இடம்பெற்றது. A walk organized to mark the World Glaucoma Week under the theme “Beat Invisible Glaucoma” held under the patronage of President Maithripala…

Read More

கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) காலை முன்னிலையானார். அது , ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 8.45 மணியளவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணையத்திற்கு வந்ததாக அதன் பேச்சாளர் ஒருவர்   தெரிவித்திருந்தார்.

Read More

ஸக்காத் அமைப்புக்களுடனான சந்திப்பும், தகவல் திரட்டலும்

தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார உபகுழு நடாத்திய ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு கூட்டு ஸகாத் நிதிகளின் முறையான விநியோகம் பிரதான பங்கு வகிக்கிறது. அந்தவகையில் இலங்கையில் பிராந்திய, பள்ளிவாசல் (கிராம) மட்டங்களில் ஸகாத் நிதிகளை  சேகரித்து அவற்றின்  மூலம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுவரும் அமைப்புகள், பள்ளிவாசல் ஸக்காத் அமைப்புக்களுடான சந்திப்பொன்றை மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரதும் அனுபவங்களைப் பரிமாறி இத்துறையை மேலும் மேம்படுத்துவதற்ககான வழிமுறைகளைக் கண்டறிய இவ்வுபகுழு உத்தேசித்துள்ளது. இச்சந்திப்பிற்கு நாடாளாவிய…

Read More