Headlines

வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த பழங்கள் விற்பனை

வவுனியா வைத்தியசாலையை  அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் சிலவற்றில் பழுதடைந்த பழங்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது பழுதாகிய மற்றும் அழுகிய நிலையில் உள்ள சில பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சிறுவர்கள் கூட பழுதாகியமை தெரியாது பழங்களை வாங்கி கழுவிவிட்டு உண்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த  விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் பொது…

Read More

குளிர்பானத்துக்கு சேர்க்கப்படும் நிறம் சுகாதாரமற்றது என வழக்குத் தாக்கல்!

வியா­பார நோக்­குடன் பைக்கற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர் பானத்­துக்கு இடப்­படும் கலர் உணவு பண்­டத்­துக்கு உத­வாத நிறத்தூள் எனத் தெரிவித்து மன்னார் நீதி­மன்றில் பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் வழக்குத் தாக்கல் செய்­துள்­ளனர். மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள இலுப்­பைக்­க­டவை வெள்ளாங்­குளம் பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­யங்­களை திடீர்­ சோ­த­னை­யிட்ட மாந்தை மேற்கு பொதுச் சுகாதார அதி­கா­ரிகள் பக்கெற்றில் அடைக்­கப்­பட்டு விற்­பனை செய்­யப்­படும் குளிர்­பா­னங்­க­ளுக்கு இடப்­படும் கல­ரா­னது உணவுப் பண்­டங்­க­ளுக்கு உத­வாத பொருள் என குற்றம்சாட்­டப்­பட்டு இதை உற்­பத்தி செய்யும் வர்த்­த­க­ருக்கு…

Read More

இறக்குமதி வரியை அதிகரிக்க ஆலோசனை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More

உரமூடையின் அதிகபட்ச விலை ரூ.2,500

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஒரு மூடை உரத்தின் சில்லரை விலையை அதிகபட்சம், 2,500 ரூபாயாக நிர்ணயிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Read More

கஞ்சா விற்றுவந்த இளைஞன் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மீராகேணி கிராமத்தில் உள்ள வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்,ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது  செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து  4,080 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மன்னாரில் கண்டன பேரணி

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றுள்ளது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி குருசாந்தன் மஹாலட்சுமி தலைமையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து இன்று (29) காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர்…

Read More

மக்கள் கருத்தறியும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்றுடன் (29) நிறைவு செய்யப்படவுள்ளது. மாவட்ட ரீதியில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ள்ளார். அதற்கமைய இன்றைய தினம் அம்பாறை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி…

Read More

கொழும்பில் கோல்வ் விளையாடிய நியூஸிலாந்து பிரதமர்

கடந்த வாரம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீ, கடந்த வெள்­ளிக்­கி­ழமை  கொழும்பு கோல்வ் கழ­கத்தில் கோல்வ் விளை­யா­டினார்.

Read More

யோஷிதவின் வழக்கு ஒத்திவைப்பு

யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் ஒரே மேடையில் சந்திக்க மக்கள் விருப்பம் கொண்டிருப்பது தொடர்பில் எமது செய்தியாளர் வினவிய போது, அது குறித்து பதிலளித்த மஹிந்த, அனைவரிடமும் பல ஆசைகள் உள்ளன. அவற்றை பற்றி பின்பு யோசிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் மஹிந்த ராஜபக்ஸ சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

26 மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 26 புதிய மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் இன்று (29) நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைப்பாளர்களுக்கு  நியமனம் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

Read More

நுரைச்சோலை அனல் மின்நிலையத் திருத்தப்பணிகள் நிறைவு

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் திருத்தப்பணிகள் இன்று  மாலையுடன் நிறைவடையும் என்று இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி தொடக்கம் முழுமையாக இயக்கம் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் பணிகள் நாட்டின் மின்தேவைக்கு பாரிய தாக்கம் செலுத்தியது. தலைநகர் மற்றும் அதனை அண்மித்த பல பாகங்களில் மின்சாரம் இடைநிறுத்தப்பட்டதுடன் மின்சாரத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கடந்த வௌ்ளிக்கிழமை திருத்தப்பணிகள் ஆரம்பித்தன என்றும் இன்றுடன் நிறைவடையும் என்றும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தகு அமைச்சின்…

Read More