Headlines

ஜனாதிபதி மைத்திரி தனது நிறைவேற்று, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்

ஷிராந்தி மற்றும் நாமலை கைதுசெய்வதைத் தடுக்கவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கைவிட்டதாக, எஸ்.பி. கூறுவாறாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்போது தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார் என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தன்னிடம் இருந்த கட்சித் தலைமைப் பொறுப்பை “தா” என்று தற்போதைய ஜனாதிபதி கோரியதாக, மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் நீர்கொழும்பில் வைத்து குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று (15) இடம்பெற்ற…

Read More

விமானப்படை வரலாறு தொடர்பான ஆங்கில இதழ் கையளிப்பு!

“The history of SLAF Diyatalawa and the Regiment” (தியத்தலாவ விமானப்படை வரலாறும் விமானப்படை படைப்பிரிவும்) எனும் தலைப்பில் எழுதப்பட்ட புத்தகமொன்று பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி எயார் சீப் மார்ஷல் கோலித குணதிலகவிடம் கையளிக்கப்பட்டது. எயார் வைஸ் மார்ஷல் ஏபி சோஸா (ஓய்வு) மற்றும் விங் கொமாண்டர் எஸ்ஆர் ரத்னபால (ஓய்வு) ஆகியோரால் எழுதப்பட்ட இந்த இதழானது அண்மையில் (11) பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டது. மேற்படி புத்தகம் ஜனவரி…

Read More

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களின் மைய­மாக இலங்கை – BBS

நாட்­டுக்­கா­கவும், பௌத்த மதத்­துக்­கா­கவும் குரல்­கொ­டுத்த ஞான­சார தேரரின் கடந்த காலத்தை ஆராய்ந்து கொண்­டி­ருக்­காது உலமா சபையின் ஐ.எஸ். அமைப்­பு­ட­னான தொடர்­பு­களைத் தேடிப்­பார்க்­கு­மாறு உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கு பொது­ப­ல­சேனா அமைப்பு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து செயற்­பட்டு சிரி­யாவில் கொல்­லப்­பட்ட அபூ சிலானி என்­ப­வ­ருக்கும் இலங்கை ஐம்­இய்­யத்துல் உல­மா­வுக்கும் நெருங்­கிய தொடர்பு இருந்­துள்­ளது. இதனால் உலமா சபைக்கும் ஐ.எஸ் அமைப்­புக்கும் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கிக்­கிறோம் என்றும் தெரி­வித்­துள்­ளது. கொழும்பு, கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு…

Read More

சுந்திரக் கட்சி துண்டாடப் படுவதால் நாட்டிற்கே பாதிப்பு

– ஷம்ஸ் பாஹிம்  – சுதந்திரக் கட்சியை உடைக்கும் பாவகாரியத்துக்கு ஜ.தே.க ஒருபோதும் துணைபோகாது என களுத்துறை மாவட்ட ஜ.தே.க பிரதி அமைச்சர் அஜித் பி பொரேரா தெரிவித்தார். ஆனால், நாட்டுக்கு எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பரவாயில்லை கட்சியைத் துண்டாடியாவது தமக்கு எதிரான குற்றங்களை மறைக்க ஒரு தரப்பினர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். களுத்துறை பகுதியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் சுதந்திரக்கட்சி பிளவு குறித்து கருத்துத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சி துண்டாடப்படுவது ஜனநாயக்திற்கு அச்சுறுத்தலாகும்.ஜனாதபதி…

Read More

பொது மக்களுக்கான நடமாடும் சேவை!

167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை இன்று 167பி புதிய காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. 167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக்குழுவின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இந் நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்தியம் ஒன்றிற்கான உதவிப் பொலிஸ்…

Read More

சிசிலியாவை 23ஆம் திகதி ஆஜர்படுத்த உத்தரவு

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23ஆம் திகதியன்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். கோல்டன் கீ நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட வைப்பீட்டாளர்களின் பணத்தில் 720 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவத்தின் ஆறாவது சந்தேகநபரான சிசிலியாவுக்கு 91 குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பிரதமர் அலுவலகத்தை நோக்கி பயணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்த போதிலும், இன்று வரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் தற்போது 32000 வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்…

Read More

சங்கக்காரவை விடவும் அரசாங்கம் சிறப்பாக விளையாடுகிறது – மஹிந்த

மின்சாரக் கதிரையில் ஒரே நாளில் சாவு ஆனால் மைத்திரி என்னை அணுஅணுவாக சாகடிக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் . அளுத்கம பிரதேசத்திலுள்ள கடற்கரைப் பகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை மாலை உடற்பயிற்சியில் ஈடுபட மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். இதனை அறிந்த ஊடகவியலாளர்கள் அங்கு சென்று அவருடன் கலந்துரையாடிய போதே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்ததில்லை. எனக்கு வாக்களித்த 58 லட்சம் வாக்காளர்களுக்கும் துரோகம் செய்ததில்லை….

Read More

ஜனாதிபதி பேர்லினை சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன ஆகியோர் நேற்று (15) அதிகாலை பேர்லினில் அமைந்திருக்கும் டெகல் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 01 – 02 ஜேர்மன் அரசாங்கத்தின் பிரதான தலைமை மரபுச்சீர்முறை அலுவலர் திரு. ஜேர்ஹன் கிறிஸ்டியன் மெர்டென்ஸ் அவர்கள் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்கின்றார். 03 – 06 ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் பாரியார் ஆகியோரை ஜேர்மனில் அமைந்திருக்கும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் ஹோட்டலில்…

Read More

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் பலி!

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரொருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Read More

இலங்கையின் தங்கப் பதக்க எண்ணிக்கை போதாது

– நெவில் அன்­தனி – இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை வென்­றெ­டுத்த 25 தங்கப் பதக்­கங்கள் போது­மா­னது என்றோ பெரு­மைப்­ப­டக்­கூ­டி­ய­தென்றோ கூற­மு­டி­யாது என விளை­யாட்டு விழா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேம­சிறி பெர்­னாண்டோ தெரி­வித்தார். அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு இவ் விளை­யாட்டு விழாவில் இலங்­கையின் பெறு­பே­று­ பற்றி கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். ‘‘இற்­றைக்கு கால் நூற்­றாண்­டுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற ஐந்­தா­வது தெற்­கா­சிய விளை­யாட்டு…

Read More

வெல்கமவுக்கு பிணை

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலதிக வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 24ம்; திகதி வரை  ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவருக்கு ரூபா 3.2 மில்லியனை, சட்ட விதிமுறைக்குட்படாத வகையில் வழங்கியமை தொடர்பில் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்சம்…

Read More