Headlines

எம்பிலிபிட்டி விசாரணைகளில் தலையீடு செய்யவில்லை: பொலிஸ் மா அதிபர்

எம்பிலிபிட்டியில் அண்மையில் இளைஞர் ஒருவர் மரணமான சம்பவம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் நடத்தி வரும் விசாரணைகளில் தாம் எவ்வித தலையீடுகளையும் செய்யவில்லை என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் எம்பிலிபிட்டியில் பொலிஸாருக்கும் பிரதேசத்தில் விருந்துபசாரமொன்றை நடத்திக்கொண்டிருந்த கும்பலுக்கும் இடையிலான மோதலில் சுமித் பிரசன்ன என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்திருந்தார். விசாரணைகளில் தலையீடு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம்…

Read More

மஸ்ஜித் இமாம் படுகொலை: காஷ்மீரில் பதற்றம்

இந்தியா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாம் டூரு பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. தலையில் தாக்கப்பட்டு பலியான இமாம் அப்துல் ஹமித் மாலிக்(வயது 45) மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில்…

Read More

நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது

நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் செய்துள்ளனர். இன்று (10) காலை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர். கட்டுநாயக்க புலனாய்வுப் பிரிவினர் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

மங்கள உடனடியாக பதவி விலக வேண்டும்: வாசுதேவ

– லியோ நிரோஷ தர்ஷன் – நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, மேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவிவிலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

பிரித்தானிய பாதுகாப்பு உத்தியோகத்தர் தென் பகுதியில் உயிரிழப்பு

காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலில் சேவையாற்றிய பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி – உனவட்டுன சுற்றுலா விடுதியொன்றிலிருந்து நேற்றைய தினம் (09) அவரது சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காலி துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள குறித்த கப்பல் மீண்டும் பயணத்தை  ஆரம்பிக்கும் வரை இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் உனவட்டு சுற்றுலா விடுதியில்  தங்கியுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மர்மமான முறையில்  உயிரிழந்துள்ளதாக…

Read More

ஜெனீவாத் தீர்மானம், இறையாண்மைக்குள் மூக்கை நுழைக்காது

– முருகவேல் சண்முகன் – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக, பல்வேறுபட்ட தவறான எண்ணக்கருக்கள் காணப்படுவதாகத் தெரிவித்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மையிலும் சுதந்திரத்திலும் தலையிடும் முயற்சி அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மனித உரிமைகளையும் ஊக்குவிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு…

Read More

குடிசையிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

இரத்தினபுரி பகுதியிலுள்ள குடிசையொன்றில் இருந்து 15 வயதுடைய சிறுவனொருவரின் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read More

வவுனியாவில் அதிகமான மூடுபனி!

வவுனியா நகரில் இன்று (10) காலை அதிகமான மூடுபனி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காலங்களை விட இன்று அதிகமாக மூடுபனிக் காணப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதமே வவுனியா பிரதேசங்களில் சாதாரண பனி நிலைமை காணப்படும் என தெரிவித்துள்ள பிரதேசவாசிகள் வழமைக்கு மாறாக இன்றைய தினம் இங்கு மூடுபனி படர்ந்துக் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Read More

சர்வாதிகாரி போன்று செயற்படத் தயாரில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலில் பங்குகொள்ளமுடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமதி கோரி நிற்கின்றனர்.எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என…

Read More

பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் உத்தரவு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி வரை (27.1.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா  உத்தரவிட்டார். கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

செயிட் அல் ஹுசைன் நாடு திரும்பினார்

செயிட் அல் ஹுசைன்  டுபாய் நோக்கி பயணமானார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்  இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Read More

சொந்த இடங்களில் மீள்குடியேற்றுங்கள்! முஸ்லிம் அமைப்பு ஆர்பாட்டம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றி பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி வடக்கு முஸ்லிம் அமைப்பு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்  அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

Read More