Headlines

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 இலட்சம் ரூபா கொள்ளை

த்தள – யுதகனாவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து 20 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

மார்க்க அறிஞராக வரவேண்டுமென்ற, சிறுவனின் உயிரை குடித்த புல்டோசர் (படங்கள்)

– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பின்தங்கிய கிராமங்களுள் மலையடிக் கிராமம் நான்காம் பிரிவும் ஒன்று இக் கிராமமானது மலைச் சாரல்களயும், மேட்டு  நிலங்களையும்,கரடு முரடான பாதைகளையும்  கொண்டதாகவே இதன் அமைவிடம் காணப்படுகிறது. தினமும் தமது அன்றாட தொழிலாக கூலித்தொழில் செய்பவர்களே இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இக் கிராமமும், இக் கிராம மக்களும் ஒரு சோகம் நிறைந்த நாளை கடந்த சனிக்கிழமை (03.10.2015)  சந்தித்து இன்றுவரை ஆளாத்துயரில் இருந்து வருகின்றனர். சிஹாப்…

Read More

வத்தளையில் இரவு வேளையில், ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள்

வத்தளை அவரகொட்டு பகுதி மக்கள் நேற்றிரவு (07) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றினால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹெந்தலை, அவரகொட்டுவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றிலிருந்து வௌியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் புகையினால் சூழல் பாரியளவில் மாசடைவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமது சுகாதார நிலைமை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூழல் மாசடைவது தொடர்பில் தொழிற்சாலை முகாமைத்துவம் மற்றும் பொலிஸாருக்கு…

Read More

பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய 23க்கு முன் விண்ணப்பிக்கவும்

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடி­வுகள் நேற்று வெளியா­கி­யுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு முன்­ன­தாக விண்­ணப்­பிக்­கு­மாறு பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. சம்­பந்­தப்­பட்ட மாண­வர்கள் பாட­சாலை அதிபர் ஊடாக குறித்த விண்­ணப்­பங்­களை அனுப்ப முடியும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்த மேல­திக விப­ரங்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்­சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

லசந்த படுகொலை : சிம் அட்டைகளைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சந் தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் லசந்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரால் பயன் படுத்தப்பட்டுள்ள இந்த சிம் அட்டைகள் ஐந்தும், அக்காலப்பகுதியில் வெலிக்கடை சிறைக்கைதியாக இருந்த ஒருவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த சிறைக்கைதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள நிலையில், சிறையில்…

Read More

‘பொடி சூட்டி’ கைது

கிராண்ட்பாஸ் மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் போதைப் பொருள் விநியோகம் செய்­து­வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ‘பொடி சூட்டி’ என்­பவரை கொழும்பு துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்­டவின் கீழுள்ள துஷ்­பி­ர­யோக தடுப்புப் பிரிவு முன்­னெ­டுத்த விசேட நட­வ­டிக்கை ஒன்றின் போதே 20500 மில்­லி­கிராம் ஹெரோயின் போதைப் பொரு­ளுடன் சந்­தேகநப­ரான குறித்த பெண் ஸ்டேட் வீதியில் வைத்து கைதுசெய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர்…

Read More

பிரதமர் நாடு திரும்பினார்

ஜப்பானிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பையேற்று கடந்த 3 ஆம் திகதி பிரதமர்  ஜப்பான் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாராளுமன்ற அமர்­வுகள் இன்­று­ முதல் நேரடி ஒளி­ப­ரப்பு

பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் தேசிய ரூப­வா­ஹி­னி­யூ­டாக நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பிற்­பகல் 1.00 மணி­முதல் இரவு 7.30 மணி­வ­ரை­யான செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை­யான அமர்­வுகளின்போது முதல் இரண்டு மணி­நே­ரத்­துக்கே இவ்­வாறு நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று புதன்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடிய பாரா­ளு­மன்ற விவ­கார தெரி­வுக்­குழு கூட்­டத்­தி­லேயே மேற்­படி தீர்­மானம் எட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. பாரா­ளு­மன்ற அமர்­வுகள் பியோ ரீ.வி.யூடாக நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்டு வந்­த­போ­திலும், பின்னர் அது இடை­நி­றுத்­தப்­பட்­டது. இடை­நி­றுத்­தப்­பட்ட மேற்­படி…

Read More

காலி கடற்பரப்பில், ஆயுதக் கப்பல் பிடிக்கப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலிக்கு அப்பால் 15 கடல்மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரட்ன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் இருந்து சுமார் 810 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கப்பல் காலி துறைமுகத்தில் தரிக்கச்செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கப்பலில் தலைவரிடம் இருந்து இதுவரை முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் யுக்ரெய்னுக்கு சொந்தமானது என்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளபோதும் அதன் கெப்டன் இலங்கையர் என்று கூறப்பட்டுள்ளது.

Read More

அஹமட் முஷர்ரப் பெற்று சாதனை!

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நேற்று (07) புதன்கிழமை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் 189 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் மற்றும் ஆங்கில ஆசிரியை திருமதி சல்மா ஜவாஹிர் ஆகியோரின் புதல்வருமாவார்.

Read More

மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்று கூடல்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு நடைமுறைப்படுத்தி வரும் மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான இரண்டாவது ஒன்று கூடல் இம்மாதம் 03 மற்றும் 04ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் நடைபெற்றது. சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும்…

Read More