வீதியை புனருத்தாரனம் செய்து தருமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம்
எம்.எச்.எம்.அன்வர் புதிய காத்தான்குடி பாம் வீதியை புனருத்தாரனம் செய்யுமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று நடாத்தினர். மிக நீண்ட காலமாக புனருத்தாரனம் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி தரும் இவ்வீதிக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கு தடையாக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் இருப்பதாகவும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதிமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா தெரிவித்ததாக ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் தெரிவித்தனர். இதற்கான உண்மை நிலைப்பாட்டினை அறிவதற்காகவும் அதை மக்களிடம் தெளிவுபடுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட…
