Headlines

முஹம்மது நபி(ஸல்)யை அவமதிப்பதா ? லண்டனில் இஸ்லாமியர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் !

இஸ்லாமிய இறைதூதரான முஹம்மது நபியை அவமதித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட ’சார்லி ஹெப்டோ’ பத்திரிக்கையை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தியுள்ளனர். சார்லி ஹெப்டோவின் இந்த நடவடிக்கை லட்சக்கணக்கான இஸ்லாமியர்களின் மதநம்பிக்கையை புண்படுத்தியுள்ளது என கூறிய Muslim Action Forum (MAF) சார்ந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து லண்டனில் உள்ள Downing Street பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அந்த பத்திரிக்கையை கண்டிக்கும் விதத்தில் ‘சார்லி ஹெப்டோ…

Read More

நாம் உண்ணும் சீனியில் உள்ள ஆபத்து

நாம் அன்றாடம் உபயோகம் செய்கின்ற சீனி பற்றிய ஒரு ஆபத்தை. சொல்றன்.உங்கள் சேட் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போகல்லயா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன்…

Read More

மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும்.. சம்பிக்க அதிரடி

இலங்கையில் இடம்பெற்ற பாரிய ஊழல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதான சந்தேகநபர் என்ற அடிப்படையில் அவர் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படவேண்டும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார். முன்னைய ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல்களில் தொடர்புடையவர்களுக்கு நடப்பு அரசாங்கம் உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும். மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரையில் உள்ளவர்கள் இந்த விடயத்தில் தண்டிக்கப்படவேண்டும் என்று அமைச்சர்…

Read More

டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆம் ஆத்மி -57. பா.ஜ.க- 12 தோல்வி. காங். ‘முட்டை’!! படுதோல்வி

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 57 இடங்களில் முன்னிலை வகித்து அபார வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 3 தொகுதிகளையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு “முட்டை”தான் கிடைத்துள்ளது. டெல்லியில் கடந்த 2013 இறுதியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி 8 இடங்களை பிடித்த காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஜன்லோக்பால் மசோதாவை…

Read More

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி வாமிலா (24) மரணம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரியினல் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும்  மாணவி ஒருவர் சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி  மாவட்டத்தின் மல்லாவி, யோகபுரத்தைச் சேர்ந்த சி.வாமிலா (வயது 24)என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லடி சுவாமி விபுலானந்தா இசை, நடனக்கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி பயின்றுவந்த இந்த மாணவி,…

Read More

பலாங்கொடை பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு வந்த திடீர் சோதனை

பலாங்கொடை நகரில் அமையப் பெற்ற சிங்கள மொழி மூலப் பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் அணியும் நீண்ட காற்சட்டைக்கு பாடசாலை நிர்வாகம் திடீரென தடை விதித்தமையால் மாணவிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகி இருப்பதாக பெற்றார் கவலை தெரிவிக்கின்றனர். பலாங்கொடை பிரதேசத்தில் சிங்கள மொழி மூலத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளை இப் பாடசாலையிலேயே   பெற்றோர் சேர்க்கின்றனர். இப் பாடசாலையின் ஆரம்ப காலம் தொட்டு முஸ்லிம் மாணவியர் தமது கலாசாரத்திற்கு உகந்த ஆடையை அணிய பாடசாலை நிர்வாகம் அனுமதி…

Read More

ஹம்பாந்தோட்டையில் சீன பெக்டரியில் வேலை செய்த 300 ஊழியர்கள் ஆபத்தான நிலையில்

அஸ்ரப் ஏ சமத் ஹம்பாந்தோட்டையில் வட்டான, நுங்கம எனும் பிரதேசத்தில் சீனநாட்டின் முதலீட்டில் பட்டரி உற்பத்தி செய்யும் பெக்டரியில் பணியாற்றிய 300 ஊழியர்களில் 23 பேருக்கு உடம்பில் ஈயம் உட்புகுந்துள்ளது. மேலும் 268 பேருக்கு 46வீதம் பெற்றறி ஈய நச்சுத் தன்மை உடம்பில் உட்புகுந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மேற்படி விடயமாக இன்று(09) நாரேஹேன்பிட்டியில் உள்ள ஊழியர்கள் திணைக்களத்தில் நடாத்திய ஊடகவியாலாளர் மாநாட்டின்போதே மேற்கண்ட தகவலை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஊழியர் திணைக்களத்தின் ஆணையாளர்,…

Read More

தாதியர் சேவையின் முறையற்ற நியமனங்களுக்கு எதிர்ப்பு

தாதியர் சேவையின் உயர்மட்ட பதவிகள் சில தொழிற்சங்க தலைவர்களின் தேவைக்கேற்ப நியமிக்கும் செயற்பாட்டில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தாதியர் பணிப்பாளர், மருத்துவமனை சேவையாளர் பதவிகளும் தொழிற்சங்க தலைவர்களின் வேண்டுதல்களுக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் விசேட தரங்களைக் கொண்ட பிரதான தாதியர் அதிகாரிகளுக்கான பதவிகளை…

Read More

ஆனந்தகுமார சுவாமி மாவத்தை மீண்டும் உயிர் பெறுகிறது

நெலும் பொக்குன மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்ட முன்னய ஆனந்த குமாரசுவாமி மாவத்தைக்கு மீண்டும் பழைய பெயரே சூட்டப்பட்டுள்ளது. நாளை முதல் குறித்த வீதிக்கு ஆனந்த குமாரசுவாமி மாவத்தை என்ற பெயரே அமுல்படுத்தப்படுத்தப்படும் என கொழும்பு மாநகர சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வொன்று நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளதுடன். கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முசம்மில் இதற்கான அழைப்பை…

Read More

நாளைய சவால்களை எதிர்கொண்டு செயற்படுவதே சிறந்தது -ஜனாதிபதி

நாளைய தினத்தின் சவால்களை பற்றி சிந்தித்து காலத்தை வீணடிப்பதை விடுத்து அதனை எதிர்கொண்டு இன்றைய செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தல் மேடையில் எவ்வாறு தலைகாட்டுவது என சிலர் தம்மிடம் கேள்வி எழுப்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றியமையே முக்கிய விடயமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியனேகோரலை பிரதேச மக்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று நிட்டம்புவ பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே…

Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திருகோணமலை விஜயம்!

துகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன நேற்று (08) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார். முதலாவதாக இலங்கை தரைப்படையின் 22 ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு சென்றதுடன் அங்கு இரானுவத்தினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார். இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில் திருகோணமலை மாவட்டம் இயற்கை எழில் துறைமுகத்தை கொண்டுள்ளமையால் சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற காரணமாக அமைவதுடன் வெளிநாட்டவர்களின் மனதையும் கவர்ந்துள்ளதாக அமைந்துள்ளது. 30 வருட கால யுத்தம் காரணமாக இம்மாவட்ட மக்கள் பல…

Read More

பொதுத் தேர்தல் அக்டோபர் மாதத்திற்கு முன்னர் இடம்பெறும் – ரவி கருணாநாயக்க

ஐக்கிய  தேசியக் கட்சியின் உப தலைவரும் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க மொரட்டுவ சொ்ய்சாபுர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் சொய்சாபுர அலுவலகத்தை திறந்து வைப்பதற்காகவும் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காகவும் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார் தற்போது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமே தவிர அரசியலுக்கு சேவையாற்ற வேண்டியதில்லை. இந்த அதிகாரத்தை சர்வாதிகார  ஆட்சியில் இருந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் பெற்றுக்…

Read More