பசிலை விசாரிக்க சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும்: அரசாங்கம்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணை செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது குறித்து வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் தற்போது தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். எனவே அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள…
