177 தேர்தல் சட்ட மீறல்கள் தேர்தல்கள் செயலகம் தகவல்
தேர்தல் சட்ட மீறல் சம்பவங்கள் 177 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. சட்ட விரோதமான முறையில் பொருட்கள் விநியோகித்தல் தொடர்பில் 87 முறைப்பாடுகளும், பதாகைகள் மற்றும் கட்அவுட்களை ஒட்டுதல் தொடர்பில் 24 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை பயன்படுத்துதல் தொடர்பில் 20 முறைப்பாடுகளும், மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 06 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது….
