Headlines

களுபோவில பேக்கரியில் தீ விபத்து

– எம்.எஸ்.எம்.சாஹிர் – களுபோவில, ஆசிரி வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான வெதுப்பகம் (பேக்கரி) ஒன்றில் நேற்று மாலை 6.30 மணியளவில் (02.12.2015) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவ்வேளையில் பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் இருந்தவர்கள் விரைந்து செயற்பட்டதினால், பெரிதாகப் பரவ இருந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. அதன் பின்னர் வந்த தீயணைப்புப் படையினர் முற்றாகத் தீயை அணைத்தனர். தீ ஏற்பட்ட வேளையில் வெதுப்பகத்தில் யாரும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வெதுப்பகம் தீப்பற்றி முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் தீ ஏற்பட்டதுக்கான காரணம்…

Read More

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு அழைப்பாணை

உச்ச நீதிமன்ற நீதியரசர் சரத் டி ஆப்ரூ அடுத்த வருடம் ஜனவரி 12ம் திகதி நீதிமன்றத்திற்கு முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணொருவரை தாக்கியது தொடர்பில் நீதியரசருக்கு எதிராக கல்கிஸ்ஸ காவற்துறைக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இவ்வழக்கு  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

Read More

1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்

1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார்….

Read More

கிடங்கிற்குள் இறங்கியவர்கள் மர்மமாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்ததையடுத்து, அதைத் திருத்துவதற்காக ஒருவர் கிடங்கினுள் இறங்கியுள்ளார். இறங்கியவர் எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பதை அவதானித்த…

Read More

புத்தகாயாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

புத்தகாயாவிற்கு யாத்திரை சென்று அங்கு சிக்கியுள்ள 108 இலங்கையர்களை நாளை சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அசல வீரகோன் தெரிவித்தார். மேலும் அவர்கள் எதிர்வரும் 6ம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

Read More

தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு

சென்னை மற்றும் தமிழகத்தில் பெய்யும் கனமழையால் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அசோசெம் கூறியுள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைந்த கூட்டமைப்பு (அசோசெம்) அறிக்கையில், சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. இந்த சூழ்நிலை வர்த்தகம், தொழிற்சாலைகள் மற்றும் பல வணிக நடவடிக்கைகளுக்கு அச்சத்தையும், ஸ்திரமற்றதன்மையையும் உருவாக்கியுள்ளது. சாதாரண குடிமகனும் சொத்துகள் சேதமடைவதன் மூலம் இழப்பை…

Read More

கோத்தபாயவிடம் இன்று விசாரணை

அவன்ட் கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்க்ஷ இன்று (வியாழக்கிழமை) பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆயுத கொடுக்கல் வாங்கல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கோத்தபாய உள்ளிட்ட ஐவரை குற்றவாளிகளாக நிரூபிக்க முடியுமென அண்மையில் பிரதி சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த மோசடிகள் தொடர்பில் பொதுமக்களிடமும் சாட்சியங்கள்…

Read More

வாகன அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக விரைவில் மாற்று திட்டம்

அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வரிவிலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர சலுகைக்குப் பதிலாக மாற்று திட்டமொன்றை விரைவில் முன்வைக்க இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 2017 முதல் சகல அரச நிறுவனங்களும் தமது உண்மையான பெறுமதியை வரவு செலவுத் திட்டத்தினூடாக வெளிப்படுத்த வேண்டும். உந்துருளி,முச்சக்கரவண்டி என்பவற்றிற்கு புகைப் பரிசோதனை கட்டணம் அறவிடப்படமாட்டாது. வெளிநாட்டவருக்கு காணி விற்கப்போவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. கடந்த ஆட்சியிலே துறைமுக நகரில் 216…

Read More

கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்

கடந்த கால திருடர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். இப்போது கைவசம் 35 “பைல்கள்” உள்ளது. இவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றது என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். டுபாய் வங்கியில் 650 மில்லியன் டொலர்கள் யாருடையது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பலரின் வங்கிக் கணக்கு தகவல்கள் வெளியில்வரும் என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 9 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே…

Read More

மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை விடமாட்டோம்

அர­சாங்­கத்­தினால் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­ 725 பாரிய ஊழல் மோச­டிகள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த 725 மோச­டி­க­ளுடன் முன்னாள் ஜனா­தி­ப­தியின் குடும்­பத்­தாரும் உற­வி­னர்­களும் மறை­மு­க­மாகத் தொடர்­பு­பட்­டி­ருக்­கின்ற அதே­வேளை இவற்றில் 25 மோச­டி­களில் மஹிந்த குடும்­பத்­தாரின் நேரடித் தொடர்­புகள் இருக்­கின்­றன. இதற்­கான ஆதா­ரங்­கள் உள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று பாரா­ளு­மன்­றத்தில் தெரிவித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நெல்சன் மண்­டே­லா­வா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை லீகுவான் கி வாகவும் இன்று வர்­ணித்துக் கொண்­டி­ருக்­கின்ற சர்­வ­தேசம் மைத்­தி­ரி­பா­லவின் ஜன­நா­யக ஆட்­சி­யையும்…

Read More

மஹிந்த எங்கே? ஏன் வர­வில்லை : சபையில் சிரிப்­பொலி

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எங்கே? ஏன் அவர் வரவு செலவுத் திட்ட விவா­தத்தில் கலந்து கொள்­ள­வில்லை என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார ஜய­மகே நேற்று பாரா­ளு­மன்­றத்தில் மஹிந்த அணியைப் பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பினார். நளின் பண்­டார எம்.பி. இவ்­வாறு கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தை­ய­டுத்து ஆளும்­கட்­சி­யினர் ஊ சத்தம் எழுப்பி மேசையில் தட்­டினர். இதே­வேளை மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரும் கூச்­ச­லிட்­டனர். அத்­துடன் பலத்த சிரிப்பொலியும் எழுந்­தி­ருந்­தது. வரவு–செலவுத்…

Read More

ஆதரவளித்த அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்­கெ­டுப்பில் ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனை­வ­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நன்­றி­களைத் தெரி­வித்­துள்ளார். 2016ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முத­லா­வது வாக்­கெ­டுப்பு நேற்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது வர­வு­செ­லவு திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி நன்றி தெரி­வித்­துள்­ள­தாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  2016 ஆம் ஆண்டிற்கான  வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆவது வாசிப்பு…

Read More