றிஷாதின் ஆதங்கமும் சம்மந்தனின் மழுப்பலும்
– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. அகதி என்ற அவல முத்திரை குத்தப்பட்ட சமுகமாகவும் உள்நாட்டுக்குள்ளேயே 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சமுகமாகவும் இந்த உலகில் இருக்கும் ஒரே ஒரு சமுகமென்றால் அது இலங்கையில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் மாத்திரமே. வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்காக அஷ்ரப் தொட்டு இன்று றிஷாத் பதியுதீன் வரை அயராது உழைத்து வருவதை இந்த நாடே அறியும். அதிலும் றிஷாதின் அரசியல் பிரவேசம்…
