காணாமல் போன சிறுமியை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பாலைநகர் பகுதியினைச் சோ்ந்த 13 வயதுடைய மாணவி முஹம்மது அலியார் பாத்திமா அஸிமா கடந்த 27ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும்போது காணாமல் போயுள்ளார். இவரை கண்டுபிடித்து தருமாறும்.இதன் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இக்குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுகோரி தியாவட்டவான் ஹுசைனியா ஜிம்மா பள்ளிவாயல் மற்றும் பாலை நகர் றகுமானியா ஜும்மா பள்ளிவாயல்கள் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்பு குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்….
