Headlines

ஊடக நிறுவனங்கள் சில என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்க முயற்சிக்கின்றன : ஜனாதிபதி

ஊடகவியலாளர் காணாமல் போவதை தடுத்து நிறுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திய போதிலும் சில ஊடக நிறுவனங்கள் என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கை பத்திரிகை கலை சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது சம்பந்தமாக ஒரு…

Read More

உலகின் மிக ஒல்லியான பேக்பேக் அறிமுகம்

தினசரி வேலைகளுக்கு லேப்டாப் மட்டும் போதும் என எண்ணுகின்றீர்களா? உங்களுக்கான முதுகில் மாட்டும் பை அறிமுகமாகியுள்ளது. வேலைக்காகவே, கல்விக்காகவோ, புதிய ஊருக்குள் குடிபுகுந்து, மாபெரும் லேப்டாப் பேகை முதுகில் மாட்டி, கூட்ட நெரிசலான பேருந்திலும், ரெயிலிலும் ஏறுபவர்களுக்குத்தான் தெரியும், பொதுமக்களின் கோபப்பார்வையைப் பற்றி! இத்தகைய சூழலிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த உலகின் மிக ஒல்லியான முதுகில் மாட்டும் பேக்ப்பேக் கைக்கொடுக்கும் என நிச்சயம் நம்பலாம்! இதற்குள், ஒரு லேப்டாப், நோட்டு மற்றும் அதன் சார்ஜர் அல்லது ஸ்மார்ட்போன் போன்றவற்றை…

Read More

மவுசாகலையில் மண்சரிவு அபாயம்: 249 பேரை வேறு பிரதேசங்களில் குடியமர்த்த நடவடிக்கை

அப்புத்தளை மவுசாகலை பெருந்தோட்டத்தின் 63 தொழிலாளர் குடும்பத்தினரைக் கொண்ட 249 பேரை மண்சரிவு அபாய நிலையற்ற டியகலை, பண்டாரயெலிய, பிட்டரத்மலை ஆகிய இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரப்பத்தனை பிளான் டேசன் பொறுப்பிலுள்ள மவுசாகலை பெருந்தோட்டம் மண்சரிவு அபாயம் ஏற்பாடும் பகுதியாக தேசிய கட்டட ஆய்வகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அத் தோட்டத்தின் தொழிலாளர் குடும்பங்களை அத் தோட்டத்திலிருந்து உடன் வெளியேற்ற வேண்டுமென்று ஆய்வகத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஏ.கணேசமூர்த்தி, ஏ….

Read More

பாதுகாப்பை பலப்படுத்தும் அப்பிள்

ஆப்பிள் நிறுவனம், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, தனது ஆன்லைன் ஸ்டோரிலிருந்து பல அப்ளிகேசன்களை நீக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் போன் பயனாளர்களின் விபரங்கள், சம்பந்தமில்லாத மற்றொருவரின் கண்காணி்ப்பிற்கு உள்ளாக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து, ஆப்பிள் நிறுவனம், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More