Headlines

“நிச்சயமாக அல்குர்ஆன் இறைவனிடமிருந்தே, வந்திருக்க வேண்டும்” – ஜெர்மன் விஞ்ஞானி!

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம். முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார். தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல்…

Read More

வத்தளையில் பௌத்த பிக்குவாக மாறிய முஸ்லிம் இளைஞன்; அதிர்ச்சிகர சம்பவம்

கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்ற ஒரு முஸ்லிம் மாணவன் பௌத்த பிக்குவாக மாறிய சம்பவம் ஒன்று வத்தள, என்டரமுள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கொழும்பு ஸாஹிரா கல்லூரி நிர்வாகஸ்தர் ஒருவரிடம்  வினவிய போது அவர் பின்வருமாறு உறுதிமொழி அளித்தார். “இம்மாணவனுக்கு சமூகத்தில் மற்றும் உலகளாவிய ரீதியில் தான் பிரபல்யம் பெற்று தனது பெயர் முழு உலகிலுமே அறிமுகமாக வேண்டும் என்ற ஒரு பேராசையும் கணவும் பாடசாலை பருவம் தொடக்கமே இருந்து வந்துள்ளது. இவரது கனவுகளை…

Read More

சதொச விற்பனை நிலையத்துக்கு அமைச்சர் றிஷாத் திடீர் விஜயம்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – நுகர்வோருக்கு தேவையான பொருட்கள் சதொச விற்பனை நிலையங்களில் இல்லையென்ற முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று இரவு புத்தளம் நகரில் உள்ள சதொச விற்பனை நிலையத்துக்கு திடீரென சென்று அங்குள்ள பொருட்கள் தொடர்பில் நேரில் பார்வையிட்டதுடன்,பாவணையாளர்கள் கேட்கின்ற பொருட்களை வழங்க வேண்டிய நடவடிக்கைகளை எடுககுமாறும் ஊழியர்களுக்கு பணிப்புரை வழங்கினார். சதொச விற்பனை நிலையங்களை நவீன மயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் பாவனைக்குதவாத பொருட்கள் தொடர்பில்…

Read More

திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – திரியதரு பிரணாம புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,ராஜித சேனாரத்ன,வாசுதேவ நாணயக்கார எம்.பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுகாதார கூட்டுறவு அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டது.நாடு தழுவிய முறையில் தெரிவு செய்யப்பட்ட 600 மாணவர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.கைத்தொழில்,வணிகத துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள கூட்டுறவு சங்க செயற்பாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது….

Read More

ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள்

ஹஜ்ஜூப் பெருநாள் விளைாயட்டுப் போட்டிகள் இன்றும் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடை பெற்றது.மோட்டார் சைக்கிள்,குதிரை,மற்றும் ரேஸ் கரத்தைகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன. பிரதம அதிதியாக கைத்தொழில்,வணித் துறை அமைச்சர் றிசத் பதியுதீன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி,வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர்,முன்னாள் உறுப்பினர் எஹியா ஆப்தீன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Read More