Headlines

வில்பத்து விவகாரம் அரசியல் பழிவாங்கும் செயலேயன்றி வேறு ஒன்றும் இல்லை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உரித்தான காணிகளிலே அவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகும் பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…. 2002 ஆம் வருடம் நான் பெருந்தோட்ட அமைச்சராக இருந்த போது வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த   முஸ்லீம்களை புத்தளத்தில் குடியேற்ற சுமார் 15 ஏக்கர் காணியை பெற்றுக்கொடுத்தேன் அப்போது அமைச்சர் ரிசாத் ஊடக அகதிகளான முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டனர். நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தை நேரடியாக…

Read More

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதியிடத்தில் அமைச்சர் றிஷாத் பகிரங்கவேண்டுகோள்….!

வில்பத்து காட்டுப் பகுதியில் அத்துமீறி முஸ்லிம் குடியேற்றத்தை  அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்வதாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபாண்டம் தொடர்பில் நேற்று  அமைச்சரவையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடத்தில் அமைச்சரவை உப-குழுவொன்றினை நியமித்து விசாரனையொன்றினை செய்யுமாறு கோறியுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த வேண்டுகோளை பகிரங்கமாக விடுத்துள்ளார். கடந்த சில வாரங்களாக சில ஊடகங்களும்,இனவாத அமைப்புக்களும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக வடமாகாணத்துக்கு உட்படாத வடமேல் மாகாணத்திற்குட்பட்ட வில்பத்து காட்டினை அழித்து பிற மாவட்ட…

Read More

இன்று வில்பத்தை அண்டிய பகுதிகளில் இனவாத குழுக்கள் விஜயம் செய்த செய்தியின் மேலதிக விபரங்கள்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)  மன்னார் மாவட்டத்தின் வில்பத்து எல்லைக் கிராமமான சிலாவத்துறைப் பகுதியில் உள்ள மரிச்சிக்கட்டி, மேதரகம பகுதியை அண்டிய உப்பாறு உள்ளிட்ட கிராமப் பகுதியில் இன்று (13) இனவாத அமைப்புக்களான ராவணபலய, சிஹல உறுமைய மற்றும் ஜே.வி.பியின் பிக்குமார் உள்ளிட்ட குழுக்கள் சுமார் மூன்று நான்கு பேரூந்துகளில் சென்று அப்பகுதியைப் பார்வையிட்டதாகவும் இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் காணப்பட்தாக அங்கிருக்கும் மீள் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவித்தனர். இவ்வாறு வந்தவர்கள் அப்பகுதி மக்களுடன் எந்தவிதச் சந்திப்புக்களையும் மேற்கொள்ள வில்லை…

Read More

வில்பத்தும் ஊடக தர்மமும்? – எம்.எம்.ஏ.ஸமட்

– எம்.எம்.ஏ.ஸமட் ஊடகம் என்பது மக்களிடையே கருத்துக்களைக் காவிச் செல்லுகின்ற, பரப்புகின்ற செயற்பாட்டைக் கொண்டதாக விளங்குகிறது. குறிப்பாகச் சொல்வதானால், கருத்தியலைக் கட்டமைப்பது, மக்களினதும் சமூகத்தினதும் இருப்பைத் தீர்மானிப்பது, சந்தைப் பொருளாதாரத்தின் வளர்;ச்சிக்கும் விருத்திக்கும் ஊக்கியாக செயற்படுவது என அதன் பங்களிப்பு உள்ளது, அதுதவிர, அரசியல், தத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், சட்டம், மருத்துவம், பொறியியல் என்ற பல்வேறு துறை சார்ந்த விடயங்களிலும் அதன் செல்வாக்கை காலூண்டியதொன்றாக ஊடகத்துறை வியாபித்திருக்கிறது. ஊடகங்கள் இல்லாத தேசத்தையோ, அதன் தாக்கத்திற்கு அகப்படாத மனித…

Read More

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல் சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில்…

Read More

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல்!

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் அறைகளுடன் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய ஹோட்டல் சவுதி அரேபியாவில் மக்கா மத்திய மண்டலத்தில் மனாபியா பகுதியில் அப்ரஜ் குடை எனும் உலகின் மிகபெரிய ஹோட்டல் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1.4 மில்லியன் சதுர மீட்டர் பரப்ப‌ளவில் 12 கோபுரங்களுடன் அமைய உள்ள இந்த ஹோட்டலில் 10 ஆயிரம் அறைகள்,70 உணவகங்கள் , மேல் தளங்களில் ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன.பாலைவனத்தில் கோட்டை போன்று வடிவமைப்பில்…

Read More

சவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனைகளை எங்கு எவ்வாறு முறைஇடுவது?

சவூதியில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு தங்கள் பணிபுரியும் இடங்களில் பல வகையான பிரட்சனைகளை சந்தித்து வருகின்றனர் அதாவது முதளாளி தொழிலாளிக்கு செர வேண்டிய சம்பளத்தையோ அல்லது பிற சலுகைகளையோ அதாவது விடுப்புப் பணம் (வெக்கேசன் மணி) சர்விஸ் மணி ஆகியவற்றை குறைவாக கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது எக்சிட் (exit)கொடுக்க மறுப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படும் போது அதை எவ்வாறு எதிர் கொள்வது யாரை அனுகுவது எப்படி முறையாடுவது என்பது பற்றி பார்ப்போம் 1.ஆன்லைன் மூலம் முறை இடலாம்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கண்டனம்

அபு அலா இந்நாட்டு முஸ்லீம்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது மிக தைரியமாக குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்க ஒரேயொரு முஸ்லிம் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதினை குற்றம் காண்பதன் மூலம் இந்நாட்டு முஸ்லிம்களின் வாழும் உரிமையினை மறுக்க சிலர் முற்படுகின்றனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் எடுக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.ஏ.சீ.நஜீப் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை (13)…

Read More

மறிச்சுக்கட்டிக்கு பஸ்களில் சென்ற குழுக்களால் பதட்டம்

சிலாவத்துறை பிரதேசத்தின் மறிச்சிக்கட்டி மற்றும் கரடிக்குளி உள்ளிட்ட கிராமங்களுக்கு ராவணபலய உள்ளிட்ட இனவாத குழுக்கள் இன்று  விஜயம் மேற்கொண்டுள்ளதால் அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. முசலி பிரதேச செயலகத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட குழுவின் விஜயத்தால் அப்பகுதி மக்கள் பயந்த நிலையில் உள்ளதாகவும், இவர்கள் சுமார் நான்கு பஸ்களில் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

Read More

இலங்கைப் பெண்கள், டுபாயில் உண்ணாவிரதப் போராட்டம்

தமக்கான சம்பள கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி, துபாயிலுள்ள இலங்கைப் பணிப்பெண்கள் சிலர் எட்டாவது நாளாகவும் சாஜாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சுமார் 100 இலங்கைப் பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அதிகாரிகளை தெரியப்படுத்தியுள்ள போதிலும், தமக்கான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனைய நாட்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், சம்பள உயர்வு உள்ளிட்ட எவ்வித வசதிகளும் தமக்கு செய்துகொடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தம்மை மீண்டும் நாட்டிற்கு…

Read More

இலங்கை – கட்டார் உறவை மேம்படுத்த முயற்சி, இருநாட்டு பொருளாதாரப் பரிமாற்றத்தின் அளவு 417.4 மில்லியன்

இலங்கை மற்றும் கட்டாருக்கிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் காணப்படும் உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாஷிம், கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் ஷேக் அஹ்மத் பின் ஜாசிம் பின் முஹம்மத் அல் தானி ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு அம்சங்களை மேம்படுத்தும் வழிகளை பரிசீலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் பொருளாதாரம்…

Read More

வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் சட்டவிரோதமாக குடியேறவில்லை – பஸில் ராஜபக்ஸ

வில்பத்து மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி  அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கியதாகவும், இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. அதன்பின்னர் அவர்கள் புலிகளினால் பலாத்காரமாக விரட்டியடிக்கபட்டனர். பயங்கரவாத பிரச்சினை…

Read More