Headlines

பாணந்துறை நகரசபையில் மோதல் : மூவர் காயம்

பாணந்துறை நகரசபையில் நகரசபை உறுப்பினர்களுக்கும் உழியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் நகரசபை உறுப்பினர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சத்திர சிகிச்சையின்போது மின்சாரம் துண்டிப்பு – நோயாளியொருவருக்கு பாதிப்பு

எம்.ஐ.அப்துல் நஸார் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவில் சத்திர சிகிச்சையொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பற்றரியின் உதவியுடன் குறித்த சத்திர சிகிச்சையினை தொடர்ந்து மேற்கொண்ட போதிலும் மேலும் 40 நிமிடங்கள் வரையிலேயே அந்த பற்றரி இயங்கக்கூடிய சக்தியை கொண்டிருந்ததாகவும் சத்திர சிகிச்சையின் பின்னர் இயந்திர சாதனங்களை இயக்குவதற்கு மின்சாரம் இல்லாமலிருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலதிக மின் பிறப்பாக்கி மூலமோ அல்லது வேறு வகையிலோ நோயாளியின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை…

Read More

அரச மரியாதையுடன் இலங்கைக்கு கொண்டு வரப்படும் பூதவுடல்..

மறைந்த அஸ்கிரிய பீட மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12ம் திகதி அஸ்கிரிய பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனமுற்றிருந்த நிலையில் சிங்கப்பூர் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் இன்று அதிகாலை காலமானார். அவரது பூதவுடலை அரச மறியாதையுடன் இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்பில் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ விசேட பிரதிநிதியாக இன்று காலை…

Read More

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்களை அணிந்திருந்த நான்கு கொள்ளையர்கள் கைது

பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் அணிந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, ஹிக்கடுவ பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் தெஹிவளை அத்திடிய தனியார் வங்கி கொள்ளை, பிலியந்தல, அத்துருகிரிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டோர் தலைகவசங்களை அணிந்தே கொள்ளையிட்டுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம்…

Read More

சவுதியின் யமன் யுத்தமும் முரண்நிவர்த்தியும்

(கால ஓட்டத்துடன் ஒன்றிய ராஜதந்திரங்களும் தற்காப்புக்கான நகர்வுகளும்) எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் அதன் உடன்பாடும் எதிர்மரையும் அந்தந்த கால ஓட்டத்தின் கருத்துவயப்பட்ட நிலையில் நின்று அணுகப்படும்போதே அதன் சாத்தியநிலை காலநிலைச் சூழலை தனக்கு சாதகமாக உருவாக்கி நிற்கும்.இது அரசியலில் மட்டுமல்ல சமூக சிவில் ராணுவ ஒழுங்கிலும் பேணப்படும் ஒன்றே. யமன் ஹூதிகளுக்கு எதிரான சவுதியின் யுத்தத்தை நோக்கும் பலர் எகிப்தில் முர்சிக்கு எதிரான சவுதியின் நிலைபாட்டில் நின்றே முரண்நிலையை நிறுவ வருகின்றனர்.ஒரு நாட்டின் இரண்டு வேறுபட்ட…

Read More

ஈரானுடனான அணு ஒப்பந்தம் வருங்கால அதிபர்களுக்கு பிரச்சினை தரக் கூடியதே!:ஒபாமா

அண்மையில் ஈரானுடன் P5+1 எனப்படும் உலகின் 6 வல்லரசு நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தமானது 13 வருடங்களில் முடிவடைந்த பின்னர் அமெரிக்காவின் வருங்கால அதிபர்களுக்கு நிச்சயம் பிரச்சினை அளிக்கக் கூடியதே என இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா ஊடகப் பேட்டி ஒன்றின் போது ஒத்துக் கொண்டுள்ளார். செவ்வாய்க்கிமை NPR செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியின் போது ஈரானுடன் P5+1 நாடுகள் எட்டிய ஒப்பந்தமானது இனி வரும் காலத்தில் எவ்விதத்திலும் ஈரான் ஓர் அணுவாயுதத்தைத்…

Read More

துபாய் பஸ்ஸில் பயணிப்பவர் [நோல்] கார்டு பதியாமல் இனி யாரும் கல்லத்தனம் செய்யமுடியாது!(விடியோ இணைப்பு)

துபாய் பஸ்ஸில் பயணிப்பவர் [நோல்] கார்டு பதியாமல் இனி யாரும் கல்லத்தனம் செய்யமுடியாது! வீடியோ

Read More

இனி குறட்டை பிரச்னை இனி இல்லை…! Dr.வாசிம் கான்!

குறட்டை பிரச்னை இனி இல்லை…! ”என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர…

Read More

சந்திரிகா மேடையேறி கமரா முன்நின்று பேச, யார் அதிகாரம் வழங்கியது – ஞானசாரர் கேட்கிறார்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு மேடைகளில் ஏறி கமரா முன் நின்று பேசுவதற்கான அதிகாரத்தை அவருக்கு  யாரும் வழங்கவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டிற்கு எத்தனை தலைவர்கள் இருக்கின்றார்கள்? சம்பிக்க, சந்திரிகா என நாட்டிற்குள் பல தலைவர்கள் இருக்கின்றார்கள். சந்திரிகா ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான அதிகாரத்தை யார் அவருக்கு வழங்கியது என்று அவர் மேலும்…

Read More

தனியார் துறையினருக்கு விரைவில் சம்பள உயர்வு: பிரதமர்

* பாலுக்கு உத்தரவாத விலை * கூடுதல் நிவாரணங்கள் விரைவில் * மே முதல் புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு ‘மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 2/3 பெரும்பான்மையுடன் 10 வருடங்களில் நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாட்களில் மேற்கொள்ள முடிந்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் தலை சிறந்த சாதனையாகும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய எஞ்சிய வாக்குறுதி களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், மக்களுக்கு மேலும் நிவாரணங்கள்…

Read More

எதிர்க்கட்சி தலைவர் தெரிவு ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித் தலைவர், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் இன்னும் பயின்று கொண்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடந்துகொண்டிருந்த போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினரான குமார் வெல்கம, எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் இன்று (நேற்று) அறிவிப்பதாக ஏற்கெனவே அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு என்ன நடந்தது…

Read More

ஏறாவூரில் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு

அப்துல்லாஹ் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நாளை (09) வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெறவுள்ளதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை தெரிவித்தார். ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 103 மாணவர்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் புலமைப் பரிசில் நிதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2012 ஆம்…

Read More