Headlines

தேசிய நிறைவேற்று சபை கூடியது

தேசிய நிறைவேற்று சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது கூடியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தேசிய நிறைவேற்று சபை, இரண்டு வாரங்களுக்கு பின்னரே கூடியிருக்கின்றது. இந்த தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணி( ஜே.வி.பி) அறிவித்திருந்த நிலையிலேயே நிறைவேற்று சபை கூடியுள்ளது.

Read More

தலைக்கவச விவகாரம்: சுற்றறிக்கைக்கு இடைக்கால தடையுத்தரவு

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசம் (ஹெல்மெட்) பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரையிலேயே இந்த இடைக்கால தடையுத்தரவு, இன்று வியாழக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவர் தாக்கல் செய்த மனுவை, பரிசீலனைக்கு உட்படுத்திய போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் கருத்துக்களை, வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர அங்கீகாரம்

இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பிலான சட்ட மூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நேற்று இது தொடர்பிலான யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த உத்தேச சட்டத்தை சமர்ப்பித்துள்ளார். இன மற்றும் மத ரீதியில் குரோதத்தை தூண்டும் வகையில் கருத்து வெளியிடும் தரப்பினருக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த…

Read More

கொட்டிக் கிடக்கிறதா சவூதியில்?

-வலையுகம் ஹைதர் அலி- இரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய்? என்ன கேள்வி இது? குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்? இவனிடம் பதிலில்லை. எழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து.அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.  …

Read More

22 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன

அப்துல்லாஹ் தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுக்களை தாம் கைப்பற்றியதாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரிவு பொலிஸ் புலனாய்வு அதிகாரி சுபைர் அப்துல் ஜவாத் தெரிவித்தார். புதன்கிழமை இரவு கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியிலுள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது 110400 சட்டவிரோத சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் இலங்கைப் பெறுமதி சுமார் 22 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியிலுள்ள வீட்டுரிமையாளர் ஆதம்பாவா சேகு சிக்கந்தர்…

Read More

வயலுக்குச் சென்ற விவசாயியைக் காணவில்லை

அப்துல்லாஹ் வயலுக்குச் சென்ற விவசாயியை புதன்கிழமை மாலையிலிருந்து காணவில்லை என அவரது மனைவி லட்சுமி பிள்ளையான் தம்பி (வயது 50) கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கல்முனை 1 சி பிரிவைச் சேர்ந்த தாமோதரம் பிள்ளையான் தம்பி (வயது 60) என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பயணித்த துவிச்சக்கர வண்டி கல்முனை உவெஸ்லி பாடசாலை மதிலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார். வழமையாக வயலுக்குச் சென்று மாலை வீடு திரும்பும்போது…

Read More

செங்கலடி பொதுநூலகத்தில் இலவச வை-பை சேவை

– அப்துல்லாஹ் – பொது இடங்களின் இலவச  WI-FI  (வை-பை) சேவையை வழங்கும் திட்டத்தின கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையின் செங்கலடி பொது நூலகத்தில் இலவச வை-பை சேவை புதனன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதாக நூலகர் கே. கார்த்தியாயினி தெரிவித்தார். நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இலவசமாக இன்ரநெற் தொடர்புகளை மேற்கொண்டு பயன்பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிழக்குப் பல்கலைக் கழகம் அருகில் இருப்பதால் அங்கு கற்கும் அதிகளவான வறிய…

Read More

லஞ்ச ஊழல் ஆணையாளருக்கு எதிராகவும் முறைப்பாடு!

மைத்ரி அரசின் கீழ் புத்துயிர் பெற்று வரும் லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் புதிய ஆணையாளர் திருமதி தில்ருக்ஷிக்கு எதிராகவே லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றே இவ்வாறு முறையிட்டுள்ளதோடு கடந்த காலத்தில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் போது நிதிக் கையாடலில் ஈடுபட்டதாகவே அவருக்கு எதிரான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

கட்டாரில் குருணாகலையை சேர்ந்த முகம்மத் ரிசா வபாத்

கட்டாரில் தொழில் புரிந்து வந்த 39 வயதுடைய குருணாகலையை சேர்ந்த Mohamed Riza கடந்த ஏப்ரல் 01 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக கட்டாரில் காலமானார். அன்னாரின்ஜனாஸா இன்று (02.04.2015) இஷா தொழுகையைத்தொடர்ந்து அபூ ஹமூர்மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். – SEYED ARIF HASSAN ZAHIR MOULANA DOHA QATAR

Read More

திருகுர்ஆனை பார்க்க முடியாத அளவிர்கு பார்வை குன்றிய நிலையிலும் லென்ஸை பயன் படுத்தி திருகுர்ஆன் ஓதும் சவூதி முதியவர்!

முதுமை வந்து விட்டது உடல் தளர்ந்து விட்டது பார்வை குன்றி விட்டது ஆயினும் திருமறை குர்ஆனின் எழுத்துகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை அதன் ஒசைகளை எமது நாவுகளில் எழுப்பாமல் இருக்கமுடியவில்லை என்பதை உறுதி செய்யும் விதத்தில் திருகுர்ஆனை பார்த்து ஓதும் அளவிர்கு பார்வை இல்லாமல் இருந்தும் லென்ஸை பயன்படுத்தி திருகுர்ஆனை ஓதும் முதியவரை தான் படத்தில் பார்க்கிறீர்கள் இடம் மக்கா மாநகரம்

Read More

இவர் யார் என்று தெரிகிறதா ?

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி, இரு புனித பள்ளியின் சேவகர், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் அவர்கள் சர்வ சாதாரணமாக உணவு அருந்துவதை காணும்போது உடல்கள் சிலிர்க்கிறது.

Read More

இது தான் இஸ்லாம்! சவூதி அரேபியா துப்புரவு தொழிலாளர்களுடன் காபாவின் இமாம் சுதைசி

முஸ்லிம்களின் முதல் புனித தளம் காபத்துல்லாஹ்வின் மூத்த இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைசி, முஸ்லிம்களின் இரண்டாவது புனித தளம் மதீனா மஸ்ஜித் அல்நபவிற்க்கு கடந்த வாரம் வந்தபோது, மஸ்ஜிதில் துப்புரவு செய்து வரும் தொழிலாளர்களுடன் ஒரு போட்டோ.

Read More