Headlines

பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசே உருவாக வேண்டும்

இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடு­பட்டும் பொரு­ளா­தார நிலையில் இன்னும் பின்­தங்­கிய நிலை­யி­லேயே உள்­ளது. ஒன்­று­பட்ட நாட்­டினுள் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யினை வென்­றெ­டுக்க வேண்­டு ­மாயின் அனைத்து கட்­சி­க­ளி­னதும் புரிந்­து­ணர்வும் ஒற்­று­மையும் அவ­சியம் என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். பாரா­ளு­மன்ற தேர்­தலின் பின்­னரும் அனைத்து கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த தேசிய அர­சாங்­கத்­தி­னையே கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க தேசிய அரசே ஒரேவழி எனவும் பிர­தமர் தெரி­வித்தார்.சக்­தி­யினால் வலுப்­பெறும் இலங்கை எனும் தொனிப்­பொ­ருளில் மின்­சக்தி, எரி­சக்தி அமைச்­சினால்…

Read More

50 கிலோ சீமெந்து மூடை 870 ரூபா! வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த நிர்ணய விலைக்கு சீமெந்து விற்பனை செய்யாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் யாழ் வருகை

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்  இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்க்கு வருகைதந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொண்டதுடன் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடினர். இக்குழுவினர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் மதியம் சந்தித்து முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

ரணிலிடம் அரசியலமைப்பு சூழ்ச்சிகள் இல்லை: அனுர குமார

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ள 19ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் பிரதமருக்கான அதிகாரம் அதிகரிப்பது எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்திலே என அவர் மேலும் கூறியுள்ளார். அதுவரை இவ் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே கிடைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதனை பறித்துக் கொள்ள முடியாதெனவும் அவ்வாறு கூறுவது முற்றிலும் பொய்யான ஒரு விடயமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சையில் சாதனை படைத்த சம்மாந்துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரி மாணவர்கள்

மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார் நேற்று வெளி­யான க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சைப் பெறு­பெற்­றி­ன­டிப்­ப­டையில் சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரியில் ஆறு மாணவர்கள் 9பாடங்­க­ளிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்­துள்­ளனர். சம்­மாந்­துறை முஸ்லிம் மத்­திய தேசிய கல்­லூ­ரியில் ஜே.எம்.எம்.ஷிகான் நஜீ­லா ­சிம்றா எம்­. எம். எவ். றசான் எ.சி.ஷமா­அப்றின் எம்.ஆர்.ஹன்சா எம்.எம்.எவ்.ஷிறாபா ஆகிய 06 மாணவர்கள் 9ஏ சித்­தி­பெற்­றுள்­ள­தாக அதிபர் எச்.எம்.பாறூக் தெரி­வித்துள்ளார். 9ஏ சித்தி பெற்று சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த குறித்த ஆறு மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன….

Read More

கணவன், மனைவி இருவருக்கும் முதியோர் கொடுப்பனவு

-வி.தபேந்திரன் – சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான புதிய சுற்றுநிரூபத்தை அமைச்சின் செயலாளர் டீ.கே.றேணுகா ஹேரத் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 70 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், சமூக சேவை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் கணவன், மனைவி இருவரும் 70 வயதைக் கடந்திருந்தாலும் ஒருவருக்கு மட்டும்…

Read More

முன்னாள் விமானப்படைத்தளபதியிடம் விசாரணை

முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி பொலிஸ் விசாரணை பிரிவு, இன்று புதன்கிழமை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டு, மிக் விமானங்கள் நான்கு, மற்றும் விமானங்கள் சிலவற்றை திருத்தும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கலில் 14 மில்லியன் அமெரிக்கடொலருக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை

– செல்வநாயகம் கபிலன் – யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.

Read More

தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள்

தாதியர் பயிற்சிப் பெற்ற 2738 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (31) அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க- சுகாதார மற்றும் சுதேசதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன- சுகாதார சேவை ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி- சுகாதார அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.பி. திஸாநாயக்க உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read More

நைஜீரிய தேர்தலில் முன்னாள் போராளி குழுத்தலைவர் வெற்றி

நைஜீரியாவில் நேற்று (31) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற்தடவையாக எதிர்கட்சித் தலைவர் முகம்மட் புஹாரி சரித்திர புகழ் பெற்ற வெற்றியை ஈட்டியுள்ளார். 72 வயதான முகம்மட் புஹாரி முன்னாள் போராளிக்குழு தலைவர் ஆவார் அவர் சுமார் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார் என்று அங்கிருந்து வரும் உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு மோசடிகள் இடம்பெற்றபோதிலும் இவ்வெற்றி பாராட்டத்தக்கது என கருத்து தெரிவித்துள்ளனர் கண்காணிப்பாளர்கள். இவ்வெற்றியை பொதுமக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என பிபிஸி…

Read More

டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படை ஒத்துழைப்பு

 நாட்டில் வேகமாக பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேல்மாகாண பாதுகாப்புத் தலைமையவினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கமைய கொழும்பு- மாத்தறை- இரத்தினபுரி- கேகாலை- குருணாகலை- மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படையினர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. மேல்மாகாண பாதுகாப்புப்படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யு.ஏ.பீ மெதவலவின் கண்காணிப்பில் மார்ச் 26 முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More