பொதுத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசே உருவாக வேண்டும்
இலங்கை போர்ச் சூழலில் இருந்து விடுபட்டும் பொருளாதார நிலையில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. ஒன்றுபட்ட நாட்டினுள் சமூக, பொருளாதார அபிவிருத்தியினை வென்றெடுக்க வேண்டு மாயின் அனைத்து கட்சிகளினதும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலின் பின்னரும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்த தேசிய அரசாங்கத்தினையே கட்டியெழுப்ப வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தேசிய அரசே ஒரேவழி எனவும் பிரதமர் தெரிவித்தார்.சக்தியினால் வலுப்பெறும் இலங்கை எனும் தொனிப்பொருளில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சினால்…
