Headlines

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பற்றி ஆராய குழு வேண்டும்!

கடந்த நான்கு வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க பிரச்சாரங்கள் மற்றும் வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பைசர் முஸ்தபா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாக்கப்படுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைப் போல் அளுத்கமை…

Read More

பசிலை விசாரிக்க சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்படும்: அரசாங்கம்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணை செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். இது குறித்து வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவர் தற்போது தனது மனைவியுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றார். எனவே அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள…

Read More

இலங்கையில் மனித உரிமைகள் நிலை முன்னேறி விட்டது அமெரிக்கா

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மனித உரிமைகள் நிலைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் தனது ருவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஜனாதிபதி மைத்திரி இன்று இந்திய விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது  வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இன்று ஞாயிறுக்கிழமை மாலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்கின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார். இந்தியப் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து விஷேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் அம் மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை உறுதி செய்வது போன்ற விடயங்கள்…

Read More

சிலியில் ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் தூதர் உள்பட மூவர் பலி

சிலி நாட்டின் ஆண்டஸ் மலைத்தொடரின் அடிவாரம் அருகே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் அந்நாட்டு முன்னாள் தூதர் உள்பட மூவர் பலியானார்கள். சாண்டியாகோவில் இருந்து 570 கி.மீ தொலைவில் உள்ள ஆண்டஸ் மலைத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலைத்தொடரின் அடிவாரத்தில் விழுந்தவுடன் ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. இதில் முன்னாள் தூதரும் தொழிலதிபருமான இடாலோ சுனினோ உள்பட மூவர் பலியானார்கள். ஒருவர் மட்டும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்து உயிர் தப்பினார். உயிரிழந்தவர்களின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. காயமடைந்தவர்…

Read More

ஆத் சமூகத்தின் எலும்பு கூடுகள் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடுகள்… திருக்குரானில் அறிவித்த அல்லாஹ்வால் தண்டிக்கப்பட்ட ஹூத் நபியின் ஆத் சமூகத்தினரின் உடல்கள் என அறியப்படுகின்றது… மிகப்பெரிய மரங்களையும் பிடுங்கி எடுக்கும் ஆற்றலும பெரிய உடலும் கொண்டவர்கள்அல்லாஹ்வின் கட்டளைகள் ஏற்காமல் ஆணவம் கொண்டதால் அழிக்கப்பட்டனர் என குரானில் அறிவிக்கப்பட்டது.. திருக்குரானின் அதிசயத்தன்மைக்கு மேலும் ஓர் சான்று இதுவாகும்… மாஷா அல்லாஹ் … அல்லாஹு அக்பர்..

Read More

மஹிந்த மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான சலுகைகளும் ரத்து?

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய குழுவினர் மேற்கொண்டதாக கூறப்படும் சதி முயற்சிக்கான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

Read More