Headlines

இலங்கையில் சிறு தொழில்நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது – அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு இலங்கையில் சிறு தொழில் நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான் ஜப்பான் நாட்டு தூதுவர் நொபிஹிட்டோ ஹேயோ கைத்தொழல்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் இன்று தெரிவித்தார். புதிய அரசாங்கத்தில் மீண்டும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜப்பான் றாட்டின் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன்,எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும இடையில் காணப்படும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது….

Read More

இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவர் நியமனம்

அஸ்ரப் ஏ சமத் சிறுவர் பராமரிப்பு இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்கவினால் இலங்கை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவியாக திருமதி நட்டசா பாலேந்திராவை நியமித்து நியமனக் கடிதத்தை செத்சிரிபாயவில் உள்ள அவரது அமைச்சின் வைத்து வழங்கினார். திருமதி பாலேந்திரா லண்டன் ஒக்ஸ்போட் நியோக் ஹாவட் பல்கலைக்கழகங்களில் சட்ட முதுமாணி பட்டம் பெற்று சட்த்துறையில் நியோக் நகரில் சேவையாற்றியவர். அத்துடன் நியோக் நகரில் பரிஸ்டர் லோ சட்ட வல்லுனுராக சிறந்த சேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

லேணியம் சா்வதேச பாடசாலை ;பேச்சுப்போட்டி

அஸ்ரப் ஏ சமத் துருக்கி நாட்டவா்களால் ராஜகிரியவில் அத்துல் கோட்டையிலும் வாட்பிளேசிலும் லேணியம் சா்வதேச பாடசாலை கடந்த 5 வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வருகின்றது. இப் பாடசாலையில் மூவினங்களையும் சோ்ந்த 400 மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். கடந்த சுதந்திர திணத்தினை முன்ணிட்டு கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கிடையே ” உணவு இருந்தாலும் நாம் சுதந்திரம் இல்லாமல் வாழமுடியாது என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, குருங்நாடகம், சித்திரம் வரைதல் உதைப்பந்தாட்டப் போட்டி பாடல் ஆகிய போட்டிகளை நடாத்தி வெற்றிபெற்ற மாணவா்களுக்கு முதலாம்…

Read More

துமிந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வேலேசுதா என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், துமிந்த சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். கடந்த 3 நாட்கள் சுமார் 20 மணித்தியாலங்கள் இவ் விசாரணைகள் இடம்பெற்றன….

Read More

பதுளை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு; இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு

பதுளையில் மீண்டும்  பனிமூட்டம் அதிகரித்துள்ளதால் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது  காலநிலையில் ஏற்பட்ட இம் மாற்றத்தில் மலையகப் பகுதிகளில் இரவு  நேரங்களில் கடும் குளிராகவும் காலை 89 மணி வரை பனி மூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக பதுளை மாவட்டத்தில் பதுளை, மஹியங்கனை,  பண்டாரவளை, அப்புத்தளை, பெறகலை, ஹல்தும்முல்லை, வெலிமடை, பொறகஸ், ஹக்கலை, தியத்தலாவை, குருத்தலாவை, பூனாகலை , கொஸ்லந்தை , எல்ல, ரத்தம்ப போன்ற பிரதேசங்களில் கடும் பனிப் பொழிவு நிலவுகின்றது. இப்பகுதியில்  தேயிலை மலைகளில் வேலை…

Read More

கடந்த 10ஆண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாமிய குழைந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கானது பிரிட்டன் பத்திரிகை DAILY MAIL!

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய குழந்தைகளின் எண்ணிக்கை பிரிட்டனில் இரட்டிப்பாகி இருப்பதாக பிரிட்டனின் டெயிலி மெயில் என்ற பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது மொத்தத்தில் பிரிட்டனில் கடந்த பத்து ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 75% உயர்ந்திருப்பதாகவும் அந்த இதழ் தெரிவித்துள்ளது 2001 ஆண்டில் வெறும் 15 இலட்சமாக (1500000) இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை தர்போது 27 இலட்சமாக (2700000) உயர்ந்துள்ளது இது 75% சதவீத வளர்ச்சியாகும் பத்து ஆண்டுகளில் மட்டும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12 இலட்சம்…

Read More

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய இருவரிடமும் விசாரணை செய்ய காத்திருக்கும் பொலிஸ் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரிடமும் கேள்விகளை கேட்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஒரு சதி முயற்சியை மேற்கொண்டனர் என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான ஆலோசனையே பெற்றுக்கொள்ளப்படவிருக்கின்றன. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளதாவது, இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணை கோப்புகள் நிறைவுக்கு…

Read More

ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்த நாடாளுமன்றத்தில் அனுமதி கோரினார் ஒபாமா!

நேற்று புதன்கிழமை ISIS இற்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். இதன்போது சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS இற்கு எதிரான வான் தாக்குதல் அடிப்படையிலான யுத்தத்தில் அமெரிக்க மிக வலிமையாக இருப்பதாகவும் ISIS இயக்கம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தேச கூட்டுத் தீர்மான வரைவு ஒன்றையும் தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் ஒபாமா அனுப்பியுள்ளார். நேற்று மதியம் ஒரு பத்திரிகையாளர்…

Read More

தேசிய அரசாங்கத்தில் சிறந்த நாட்டை உருவாக்குவோம்: ரணில்

பாரா­ளு­மன்ற தேர்­தலின் பிற்­பாடு ஐந்து வரு­டங்கள் அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்போம். அத­னூ­டாக எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சிறந்த நாட்டை பெற்­றுக்­கொ­டுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். எமது அரசின் நூறுநாள் வேலைத்­திட்டம் பாரிய சவால்­மிக்­கது. அதனை நிறை­வேற்­று­வதே எமது இலக்­காகும். பொது இலக்­கு­களை நிறை­வு­கண்டு நூறு நாட்­களின் பிற்­பாடு பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்கு செல்வோம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்பு றோயல் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்­க­ளான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட புதிய அரசின்…

Read More

2000க்கும் மேற்பட்ட பைல்கள் காணாமல் போயுள்ளன; ரவி

நிதியமைச்சிலிருந்து 2000க்கும் மேற்பட்ட ஆவணக் கோவைகள் (பைல்கள் ) காணாமல் போயுள்ளதாக   நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நிதியமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.  நிதியமைச்சிலிருந்து 2000க்கும்  மேற்பட்ட முக்கிய ஆவணக் கோவைகள் (பைல்கள்) காணாமல் போயுள்ளன. அண்மையிலும் சில பைல்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி ஆவணக் கோவைகளை  கண்டுபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். திருடர்கள் பிடிபட்டால் கடுமையான தண்டனை…

Read More

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம்

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம் பாடப் புத்தகங்கள், சீருடைகளை வைத்துவிட்டு பாய்ந்ததாக தகவல் கே. அசோக்குமார் தெதுரு ஓயா நீர்த் தேக்கம் அருகே பாட புத்தகங்கள். பாடசாலை சீருடை என்ப வற்றை வைத்துவிட்டு ஒரு மாணவனும், மாணவியும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் நீர்த் தேக்கத்தினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.குருணாகல் காமினி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 11 ஆம் ஆண்டு மாணவியும் குளியாப்பிட்டி கும்புக்கெட்டே மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்…

Read More