நீதித்துறையின் சுயாதீனத் தன்மையே வெளிநாட்டுத் தலையீடுகளைக் தடுக்கும்: மங்கள சமரவீர
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என விரும்பினால் உள்நாட்டு நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியாளர்கள் உள்நாட்டு நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த தவறியமையாலேயே சர்வதேச நாடுகளின் தலையீடுகள் உள்விவகாரங்களில் அதிகரித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸை விலக்கியமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர்…
