Headlines

றிஷாத் பதியுதீன் அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.. (படங்கள் இணைப்பு)

ஏ.எஸ்.எம்.ஜாவித் புதிய அரசாங்கத்தின் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக றிஷாத் பதியுதீன் இன்று (16) பிற்பகல் தனது அமைச்சுப் பொறுப்பை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார். கொள்ளுப் பிட்டியில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் அவர் பொறுப்பேற்றபோது பிரதி அமைச்சர் பிரேமதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய அமைச்சரவை இன்று கூடுகிறது

புதிய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது. அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்னர் கூடும் முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராகிறார்

அஸ்ரப் ஏ சமத் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற பதவியை எடுத்துக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தோ்தல் காலத்தில் மகிந்த பக்கம் சென்ற ஜயந்த கனகொட அந்தப் பதவியை சரத்பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளாா். அடுத்த 19ஆம் திகதி பாரளுமன்றத்தில் சரத் பொண்சேகா மீள பாராளுமன்றம் சென்றதும் அவருக்கு பொருப்பு வாய்ந்த அமைச்சு வழங்கப்படும்.

Read More

புதுக்கடையில் பள்ளிவாசலினுள் படுகொலை: நடந்தது என்ன?

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்கடை, அப்துல் ஹமீத் வீதியில்  உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  குறித்த பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான  மொஹம்மட் ரவூப் மொஹம்மட் ருஷ்கி என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் தொடர்வதாகவும் வாழைத்தோட்டம் பொலிஸார் விடிவெள்ளிக்கு குறிப்பிட்டனர். நேற்று அதிகாலை 4.20 மணியளவில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய…

Read More

தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவாதம்

இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் இரு நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் நேற்று அட்டனில் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய…

Read More

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இந்த தீர்மானத்தை இன்று கூடவுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அறிவிக்கவிருப்பதாக, முன்னாள் ஜனாதிபதியின் பேச்சாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திர கட்சி பிளவடைவதை தடுக்கும் நோக்கில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். அத்துடன், இலங்கை மக்களின் நலன்கள் மற்றும் நாட்டின் நிலையான தன்மையை பாதுகாக்கவும் இந்த தீர்மானம்…

Read More

பதவி விலகப் போவதில்லை – சரத் ஏக்கநாயக்க

சத்தியக் கடதாசிகள் கையளிக்கப்பட்டதால் மாத்திரம் தாம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். பல்லேகல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனக் கூறியுள்ளார்.எவ்வாறாயினும், மத்திய மாகாண சபையில் உள்ள 58 உறுப்பினர்களுள் 34 உறுப்பினர்கள் இணைந்து, மத்திய மாகாண புதிய முதலமைச்சராக திலினபண்டார தென்னகோனை நியமிக்குமாறு கோரி சத்தியகடதாசியை கையளித்திருந்தனர். இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் செயற்படவிருப்பதாக, மத்திய மாகாண ஆளுனர்…

Read More

மஹிந்தவின் இறுதி நடவடிக்கை மரண தண்டனைக்குரிய பாரிய குற்றம் -வாசுதேவ

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்க கையளிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள தீர்மானம் மரண தண்டனைக்குரிய பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார இந்த கருத்தை வெளியிட்டடுள்ளார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு இணங்க இந்த தலைமை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

Read More

மஹிநதவினால் நியமிக்கப்பட்ட 62 தூதுவர் உடனடியாக மீண்டும் நாட்டுக்கு அழைப்பு -வெளிநாட்டு அமைச்சர் அதிரடி

அஸ்ரப் ஏ சமத் முன்னைய ராஜபக்ச அரசில் வெளிநாட்டு தூதுரகங்களில் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட 62 தூதுவர்கள் 32 தூதுவராலயங்களில் கடமையாற்றும் சகலரையும் இந்த வாரத்திற்குள் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டு நாட்டுக்கு வரவழைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளார் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர. இவற்றில் 1 மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்ட ஹுசைன் முஹம்மத் ஜித்தாவில் உள்ள டொக்டர் உதுமாலெப்பையும் அடங்குகின்றனர். இதில் அனேகமான தூதுவர்கள் கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக இலங்கை வந்து தேர்தலில் ஈடுபட்டு விட்டு…

Read More

20அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் இன்று கடமைகளை பொறுப்பேற்பு

அஸ்ரப் ஏ சமத் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட 20அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் இன்று வெள்ளிக்கிழமை அமைச்சுகளுக்குச் சென்று கடமைகளை பொறுப்பேற்கின்றனர். அமைச்சர்களான சஜித் பிரேமதாச செத்சிரிபாய, வீடமைப்பு அமைச்சு, பைசர் முஸ்தபா – செத்சிரிபாய, கபீர் ஹாசீம், வேல் ரேட் சென்டர், ரவுப் ஹக்கீம் பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள நீர்விநியோக வடிகாலாமைப்புச் அமைச்சு, றிஷாத் பதியுதீன் – கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது பழைய அமைச்சு, ஜோன் அமரதுங்க கொழும்பு 7 அனர்த்த முகாமைத்துவ அமைச்சு லக்ஸ்மன் கிரியெல்ல பத்தரமுல்ல…

Read More

தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை துறந்தார் பஸில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன் னாள் பொரு ளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­ஷ விலகியுள்ளார். ஜனா திபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்­ வின் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்று அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார். ஜனவரி 15ஆம் திகதியுடன் (நேற்றுடன்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பஸில் ராஜபக்ஷ­ அறிவித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

Read More