Headlines

முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு

ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருமாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் வை.கே சின்ஹா இந்தியா சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.

Read More

நாட்டிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

நாட்டை விட்டு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மாற்றுச் சிந்தனையாளர்கள் மீளவும் நாடு திரும்ப முடியும் என புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஊடகவியலாளர்கள் மாற்றுச் சிந்தனையாளர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளங்கள் முடக்கப்பட்ட மாட்டாது என ஜனாதிபதியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் கண்காணிக்கப்பட மாட்டார்கள் எனவும்…

Read More

கட்டாரில் மைத்திரிபால, வெற்றி நிகழ்வுகள் (படங்கள்)

நடைபெற்று முடிந்த 07வது ஜனாதிபதித்தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேன வெற்றி பெற்றதையடுத்து தோகா கத்தார்யில் இலங்கை  சகோதரர்  சந்தோசங்களை வெளிப்படுத்தினர்.

Read More

எதிர்வரும் 14ஆம் திகதி பாப்பரசர் காலிமுகத்திடலுக்கு வருகை

அஸ்ரப் ஏ சமத் இலங்கைக்கு எதிர்வரும் 14ஆம் திகதி வருகைதர உள்ள பாப்பரசர் – போப் ஆண்டவர் பிராண்சிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் கத்தோலிக்க மக்களைத் தரிசிப்பதற்காக ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையில் மிகப் பிரமாண்டமானதொரு இரண்டு தரிசிப்புக்; கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இத் திடலில் 50ஆயிரம் மக்களையே தரிசிக்க முடியும். இதற்காக பாரிய நிதி செலவளிக்கப்படுகின்றது. ஆனால் 8 இலட்சம் மக்கள் தரிசிப்பதற்காக வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நேற்று சுதந்திர சதுககத்தில் ஜனாதிபதி மைத்திரி பதவியேற்புக்கு…

Read More

மஹிந்தவின் திட்டத்தை முறியடித்த இராணுவத் தளபதி!- ராஜித சேனாரத்ன

கொழும்பில் இன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். கொழும்பில், இராணுவத்தினரை நிறுத்த வழங்கப்பட்ட உத்தரவை ஏற்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க மறுத்து விட்டார். அவசரகாலச்சட்டத்தின் மூலம், அதிகாரத்தை தக்க வைக்கும் திட்டத்தை முன்னைய அரசாங்கம் கொண்டிருந்தது. கடைசி நேரத்தில், உயர்மட்டத்தில், இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்க மறுத்ததன் மூலம், அரசாங்க அதிகாரிகள் அந்த…

Read More

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்! பிற்பகல் 2 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!

தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவார். அத்துடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார். ஜனாதிபதியுடன் பொது எதிரணியின் கட்சித்தலைவர்களும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்படுவார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி…

Read More

வெறும் 6000 ரூபா!

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு வைபவம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். நேற்றைய தினம் மாலை 6.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அவரது பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது. மிகவும் அமைதியான முறையில் மைத்திரிபால சிறிசேன தனது பதவியேற்பு வைபவத்தினை நடாத்தியிருந்தார். இதற்கான வைபவத்திற்காக 6000 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த 6000…

Read More

மைத்திரி அமைச்சரவையில் ஜே.வி.பி., மு.கா., ரீ.என்.ஏ. இடம்பெறுவதில்லை என முடிவு!

அஸ்ரப் ஏ சமத் நாளை கண்டி தலாதா மாளிகையில் பி.பகல். 3.00 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அமைச்சரவையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், ஜே.வி.பி இடம்பெறுவதில்லை என அக் கட்சிகள் தீர்மாணம் அரசுக்கு ஆதரவு ஆனால் அமைச்சர் பதவிகளை பெறுவதில்லை. முஸ்லீம் காங்கிரஸ் மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆதரவு அளிப்பதே எமது நோக்கம், பதவிக்காகவும் நாம் ஒருபோதும் துணைபோகும் கட்சி அல்ல, அரசின் 100 நாள் வேளைத்திட்டத்தில் சொல்லியிருந்த சகல திட்டங்களுக்கும் நாம் ஆதரவளிப்பதாக…

Read More

நாட்டில் வாழும் சகல தமிழ் பேசும் மக்களிடத்திலும் அசாத் சாலி விடுக்கும் அவசர வேண்டுகோள்!

அஷ்ரப் ஏ சமத் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்துடன் அல்லது ராணுவம் பாதுகாப்பு தரப்புடன் சண்டை மூட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இது தொடர்பாக பாதுகாப்ப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தியிள் குறிப்பிட்டுள்ளார். வரும் தினங்களில் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் மிக அவதனமாவும் நிதானமாகவும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More