Headlines

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை ஆச்சரியம்

இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில். முழுமையாக உள்நாட்டு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1931ஆம் ஆண்டு முதல் இலங்கை, ஜனநாயக வரம்புகளை பின்பற்றி வருகிறது. இதன் அடிப்படையிலேயே தேர்தல்களும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் உள்நாட்டு தேர்தல் ஒன்றில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தலையீடு தேவையற்றது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ள அறிக்கை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய…

Read More

“எதிரணி வேட்பாளர் மஹிந்த’ தடுமாறி உச்சரித்தார் டக்ளஸ்

“பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ­’ என்று தடுமாறி உச்சரித்து பின்னர் சுதாகரித்து சரியாக வாசித் தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப் பாணம் துரையப்பா விளையாட்ட ரங்கில் ஆரம்பமாகியது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹிந்தவை வாழ்த்தி, அவரை ஆதரிக்கக் கோரி வெற்றிலைச் சின்னத் துக்கு வாக்களிக்குமாறு உரையாற் றினார். அந்தச் சமயத்தில் உரையின் இடையே “பொது எதிரணி…

Read More

அலைபேசியூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துக

சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதைத் தவிர்க்கு மாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48 மணிநேரத் துக்கு முன்னர் செய்யப்படும் இவ்வா றான பிரசாரங்கள் தேர்தல் சட்டங் களை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளையும் வேட்பா ளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

சர்வதேச விவாத போட்டியில், கலந்து கொள்வதற்காக மலேசியா பயணமாகின்றார்…!

இர்ஸாத் ஜமால் (M.A) சிட்டாகோங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்தில் கணனித்துறையில் (Bsc in computer Science)  தனது உயர் படிப்பினை தொடரும் இலங்கை மாணவன்  அப்துல் றஹூமான் சர்வதேச விவாத போட்டியில் கழந்து கொள்வதற்காக சர்வதேச விவாத போட்டியில் கலந்து கொள்வதற்காக மலேசியா பயணமாகின்றார்.பயணமாகின்றார். இஸ்லாமிய நாடுகளுக்கான அமைப்பினால் (IOC) வருடம் தோறும் சர்வதேச ரீதியில் நாடத்தப்படும் இப்போட்டயின் முதல் கட்டம் 15.12.2014 ம் திகதி சிட்டாகோங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்தில் நடை பெற்றது….

Read More

பிள்ளையைக் கடத்தி மைத்திரிபாலவிற்கு எதிரான, பிரசாரத்திற்குப் பயன்படுத்தியதாக முறைப்பாடு

தமது பிள்ளையைக் கடத்திச் சென்று ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாக தாயொருவர், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு இன்று நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது; கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியினால்,…

Read More